ஆதாரம் இல்லாமல் நான் வாழக்கூடும்... அன்பே... அன்பே...
தாவரங்கள் தோன்ற, உயிர் வாழ மண், நீர் நீ. காற்று ஆகாயம் என்ற ஐம்பூதங்களின் சேர்க்கை அவசியம் தேவை, ஆனால் இந் ஐம்பூதங்களின் சேர்க்கை இல்லாமலேயே தோன்றும் தாவரங்களும் இருக்கத்தான் செய்கின்றன. அதாவது தாவரங்கள் மண்ணில் வேருதிை. பூமியிலிருந்து நீரைப்பெற்று, சூரிய வெளிச்சம் பட்டுதான் வளர்ந்து பூ பூத்து காய்க்க வேண்டுமென்பதில்லை. எந்த வகையிலும் ஊன்றாமல், பூமியில் படாமல், வெறும் காற்றை சுவாசித்தே காற்றிலிருக்கும் ஈரத்தைப்பெற்றே, வளர்ந்து கொடியாகி இலை தளிர்விட்டு பூ பூத்து காய்க்கும் செடி கொடியினமும் உண்டு.
"அந்தத் தாவரம் உங்களுக்கும் தெரிந்ததுதான். சில வீடுகளில் பார்த்திருப்பீர்கள். வீட்டின் முகப்பில் உயரத்தில் ஒரு கிழங்கை நூலில் கட்டி தொங்கவிட்டிருப்பார்கள். அந்தரத்தில் தொங்கியபடியே அந்த கிழங்கிலிருந்து தளிர்விட்டு கொடியாக படர ஆரம்பித்து அந்தரத்திலேயே வளர்ந்து கொண்டிருக்கும்." ''ஆமாம். நான் கூட பார்த்திருக்கிறேன். ஏதோ அழகுக்காக அதை கட்டி தொங்க விட்டிருக்கிறார்கள் என்றல்லவா இதுநாள் வரை எண்ணிக் கொண்டிருக்கிருப்பீர்கள்."
இல்லை. அது அழகுக்காக மட்டுமில்லை. விஷ ஐந்துக்களான பாம்பு, தேள், பூரான் போன்றவை இது வளரும் வீடுகளில் வரவே வராது. முக்கியமாக பாம்புகளுக்கு இந்த கொடியின் வாடை பிடிக்கவே பிடிக்காது. ஓடிவிடும். மேலும் அப்படி யாருக்காவது முன் சொன்னபடி பாம்பு போன்றவற்றின் கடியினால் தீங்கு ஏற்பட்டால் அந்த விஷத்தை முறித்து "துட்டவிடம் பாண்டு வெப்பு சூலைவா தங்கிரந்தி குட்டம் அரிப்பக்கி கோண்குடல் நோய் - கெட்டகண்ட மாலைபோம் கொல்லன்கோ வைக்கிழங்கால் முத்தோட வேலைபோம் பாரில் விளம்பு"
அரையாப்புக்கட்டி (PUBO), நாட்பட்ட வெள்ளை (Chronic Leucorrhoea), கொருக்குநோய், நாட்பட்ட ஆறாத விரணங்கள் ஆகியவை நீங்கும். எவ்வளவு கொடிய நஞ்சுள்ள நாகமாயினும் இக்கொடியைக் கண்டால் நடுங்கி ஓடுமென்பர்.
கண்டமாலை (Tubercular Adenitis) மற்றும் நஞ்சு முறிவுக்கு இக்கிழங்கு முக்கிய மருந்தாகப் பயன்படுகிறது. இந்த ஆகாச கருடன் கிழங்கு பச்சையாக இருக்கும்போதே எடுத்து அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து 60 மி.லி. வெந்நீரில் கரைத்துக்குடிக்க கொடுக்க வேண்டும். தினம் ஒரு வேளையாக 3 நாட்கள் தொடர்ந்து கொடுக்க குரங்கு, பூனை, நாய், நரி, சிறுத்தை, குதிரை, முதலை. வேங்கை இவைகளின் கடியினாலுண்டான நஞ்சுகள் நீங்கி குணமாகும். மேலும் அரைத்த விழுதை தொடர்ந்து 3 நாட்கள், கடிவாயிற் பூசி வர வேண்டும். இதேபோல் பச்சைக்கிழங்கை சிறுசிறு துண்டுகளாக்கி பட்டாணி அளவு கிழங்குத்துண்டுடன் வெற்றிலை சேர்த்து மென்று விழுங்க தேள். நட்டுவாக்காலி இவைகளினாலுண்டான நஞ்சும். அதனைத் தொடர்ந்து நெறி கட்டுதலும் குணமாகும்" என்றேன்.
''ஆகாச கருடன் கிழங்கு நஞ்சு முறிவு மருத்துவத்தில் பெரும் பங்கு வகிக்கிறது"
"இன்னும் இருக்கிறது. கருடன் கிழங்கு. குப்பைமேனி, அவுரி, ஆவாரை. கீழாநெல்லி இவ்வைந்து வகை இலைகளையும் இடித்து சாறு பிழிந்து, உள்ளுக்கு வேளைக்கு ஒரு அவுன்சு வீதம் குடிக்கக் கொடுத்து மேலுக்குத் தடவிவர எல்லாவிதமான கொடிய நாகத்தின் நஞ்சும் மறையும்".
“கருடன் கிழங்கை வைத்து சித்த மருத்துவத்தில் முக்கியமான தயாரிப்பு முறை ஒன்றை சொல்லுகிறேன்" பயன்படுத்திக்கொள்ளுங்கள்....
*கருடன் கிழங்கு 1200 கிராம் வாளுழுவை அரிசி, சுக்கு, மிளகு. திப்பிலி, கருஞ்சீரகம் வகைக்கு 100 கிராம். இவை எல்லாவற்றையும் உரலிலிட்டு நன்றாக இடித்து, 10 விட்டர் நீரிலிட்டு சுண்டக்காய்ச்சி. நீரை வடிகட்டி, அத்துடன் 2 லிட்டர் சிற்றாமணக் கெண்ணெய் கூட்டி, மீண்டும். அடுப்பிலேற்றி எரித்து, அதில் 1200 கிராம் வெள்ளை வெங்காயத்தை சிறு சிறு துண்டுகளாக அரிந்து போட்டு மிதமான தீயால் எரிக்க வெங்காயம்நன்றாக எரிந்து மிதக்கும் சமயம், இறக்கி வடிகட்டி பத்திரப்படுத்திக் கொள்ளவும்
'கருடன் கிழங்கு எண்ணெயை எந்தெந்த வியாதிக்கு எப்படி பயன்படுத்த பலன்தரும்''
இந்த எண்ணெயை வேளைக்கு 10 மி.லி. முதல் 15 மி.லி வரை உடல்நிலைக்கு தக்கவாறு தினசரி ஒருவேளை காலையில் தொடர்ந்து 3 முதல் 5 நாட்கள் வரை நீராகாரத்துடன் சாப்பிட்டு பத்தியம் காக்க வேண்டும். தேவைப்பட்டால் ஒரு மாதம் கழித்து மீண்டும் இதேபோல் சாப்பிடலாம். இதனால் வெள்ளை, வெட்டை, குட்டம், வெண்குட்டம், அரையாப்பு, கொருக்கு நோய், மேக விரணம், மூட்டுவாத நோய்கள், மேக சம்பந்தமான நோய்கள் அனைத்தும் குணமாகும்"
அடுத்த பதிவில் வேறொரு மூலிகை பற்றி பார்ப்போம்.
மேலும் மூலிகைகள் மற்றும் சித்த மருந்துகளை பற்றிய உங்களது சந்தேகங்களுக்கும், ஆலோசனைக்கும் தொடர்பு கொள்ளவும்…



No comments:
Post a Comment