About Me

My photo
Vellore, Tamil Nadu , India
Showing posts with label கோமதி சக்கரம்.... Show all posts
Showing posts with label கோமதி சக்கரம்.... Show all posts

Tuesday, August 17, 2021

கோமதி சக்கரம்…

 கோமதி சக்கரம்:



துவாரகா சிலா,துவாரகா கல், விஷ்ணு சக்ர கல், பிரதீக்கல்,நாராயணக்கல், திருவல சுழி கல்,சொர்ணக்கல்}
கோமதி நதியில் கிடைக்கும். கோமதி சக்கர கல்லை வணங்கினால் முக்தி தரும் அயோத்தியா, மதுரா, ஹரித்துவார், காசி, காஞ்சி, உஜ்ஜயினி(அவந்திகா), துவாரகை ஆகிய ஏழு ஷேத்திரங்களை வணங்கிய பலன் கிட்டும்.
கோமதி ஆறு,கங்கையில் உருவாகி பிரிந்து இறுதியாக கடலில் கலந்து முடியும் இடம் துவாரகையாகும்.
துவாரகையின் பவித்ரமான கோமதி நதியில் அஷ்டலட்சுமியும் குடிகொண்டதால் தான் இந்நகரமே ஜொலிக்கின்றது. அஷ்டலட்சுமிக்கு இணையாக பகவானால் உருவாக்கப்பட்ட மேலான செல்வமே கோமதி சக்கரம். கோமதி சக்கரத்தை வழிபட்டதால்தான் துவாரகை மக்கள் நிம்மதியாகவும், சந்தோஷமுடனும் வாழ்ந்தனர்.
கோமதி சக்கர கல்லை பூஜிப்பவர்கள் மோட்சம் அடைகிறார்கள்.ஸ்ரீ கிருஷ்ணர் கோமதி கல் சுழியின் மீதமர்ந்தே ஆட்சி செய்ததாக ஐதீகம். துவாரகையில் கிருஷ்ணன் மக்கள் சங்கடம் போக்கி கொள்ள கோமதி சுழியை பதித்து கொடுத்துள்ளார் என்ற ஐதீகமும் உண்டு.
கோமதி ஆறின் பிறப்பிடம் அதன் சிறப்பு
லக்னோ மற்றும் உத்திரபிரதேச மாநிலத்தில் கோமதி ஆறு ஓடுகிறது. இது கங்கை நதியின் கிளை ஆறு ஆகும்.
லக்னோவில் கோமதி நதியும், அயோத்யாவில் சரயு நதியும் உருவாகிறது. இவ்விரு நதிகளிலும் அபூர்வமாக கோமதி சக்கரம் கிடைக்கிறது.
அதிஷ்டக் கற்கள் அனைத்திற்கும் முன்னோடியாகவும், நோய் தீர்க்கும் வைத்திய கற்களாகவும், வசிய கற்களாகவும் கோமதி சக்கர கல் பயன்படுகிறது. இதை பூஜித்துதான் ஆக வேண்டும் என்ற அவசியம் இல்லை. கோமதி சக்கரத்தை வைத்துக் கொண்டிருந்தாலே போதும். அதிஷ்டம் தன்னால் வரும். ஆனால் அது கங்கை நீரை சார்ந்ததாக இருக்க வேண்டும்.
மன்னர்களும் சுல்தான்களும் இதை மோதிரமாகவும் டாலராகவும் வாஸ்து குறை, நோய்குறை ,தோஷ குறை நீக்க பயன்படுத்தினர்
கோமதி சக்கர மகிமைகளும் அற்புத பலனும்
சுழி போட்டு செயல் எதையும் தொடங்கு என்று கூறுவார்கள். எச்செயலை செய்ய துவங்கும் முன்னரும் பிள்ளையார் சுழிபோட்டு செயல்களை செய்ய துவங்கினால் லாபகரமாக முடிவு இருக்கும் என்பர். பிள்ளையார் சுழிக்கு இன்னொரு பெயர்தான் கோமதி திருவல சுழியாகும். இதன் உட்பொருள் சுபம் லாபம் என்பதாகும்.
இந்த சுழியை ஒருவர் கண்டாலே அவர் மூலாதாரத்தை தொட்டதாகவும் முதற்கடவுளை வணங்கியதாகவும் அர்த்தமாகும். ஆதியில் எல்லா சுழிக்கும் முதல் சுழி கோமதி சுழியாகும். பிள்ளையாரின் துதிகை சுழியை பார்த்தால் வெற்றியாகும். அதே போல் கோமதி சுழியை பார்த்தாலே வெற்றியாகும்.சுதர்சன சக்கரத்திற்கு ஆதிசக்கரம் இந்த கோமதி சக்கரமாகும்.
கோமதி கல் ஆத்மாவை இணைத்து கோரிக்கை என்னவோ அதற்கு செயல்படுத்தினால் போதும். அக்கோரிக்கை நிகழும்.
ஒரே ஒரு சக்கரம் இருந்தால்கூட பலன் கொடுக்கும். ஆனால் கங்கை நீர் அருகில் இருக்க வேண்டும்.
இதன் உள்ளடங்கிய சக்திகள்
வலம்புரி சங்கிலும் மேல்புறத்தில் திருவல சுழி இருக்கும். இதற்க்கினையான இந்த கோமதி சக்கரத்தை வைத்து பூஜிக்கும் போது வலம்புரி சங்கின் பலனும் சேர்ந்து கிடைத்துவிடும்.
கோமதி சுழி பசுவிடம் நிறைந்துள்ளது . கண்களில், முதுகில், கால் குளம்பில், முதுகில், வால் மேல்பகுதியில், நெற்றியில், கழுத்தில், அடிவயிற்றில், குதத்தில் என பல சுழிகளை பசு மட்டுமே அதிகம் பெற்றிருக்கும். அதனால் தான் பசுவிற்கு தனி இடம் கொடுக்கப்படுகிறது
கோமதி சக்கரத்தை வலம்புரி சங்காக நினைத்தால் வலம்புரி சங்கின் பலனைத் தரும். பசு மாதாவாக நினைத்தால் பசுவின் பலனைத் தரும். பிடித்த தெய்வங்களாக நினைத்தும் வழிபாடுகள் செய்தால் அதனதன் பலனைக் கொடுக்கும்.
சாலி கிராமத்தின் உள் ரகசியமே இந்த திருவல சுழி சக்கரம் தான். இதை வைத்து பூஜிக்கும்போது பிரமிடு, மகாமேரு ஸ்ரீ சக்கரம் தனியாக வைத்து பூஜித்து அடையும் சக்தியை இந்த கோமதி சக்கரம் ஒன்றிலேயே பெறலாம்.
கோமதி சக்கரத்தை வழிபாடு செய்தால் மூன்று லோகத்தையும் வழிபட்ட பலன் கிட்டும். சிவபெருமான் சிரசு முடியின் உச்சி கங்கை சுழியும் நம் தலையில் விழும் சுழியும் இதே திருவல சுழிதான். பசுவின் பார்வை வீட்டில் பட்டால் பல பாவங்கள் விலகும். பசுவின் திருஷ்டி சக்தியே இந்த கோமதி சக்கரமாகும். இது வீட்டின் எந்த பாகத்தில் வைத்தாலும் திருஷ்டி விலகும். நாகத்தின் சுழியும் இதுவேயாகும். இந்த சுழியில் நாகலட்சுமி குடிகொண்டுள்ளாள். எனவே நாகதோஷங்கள் விலகிவிடும்.
சிவப்பு வண்ண துணியின் மேல் வைத்து பயன்படுத்தினால் இந்த கோமதி சக்கரம் மகாலட்சுமியின் அருளைப் பெற்றுத்தரும்.
சகல தோஷமும் கோமதி சக்கரத்தால் மறைந்துவிடும். பகவான் ஸ்ரீமன் நாராயணர் அளித்த திருவல சுழி சக்கரம் உள்ளவரை எத்தோஷமும் நெருங்குவதில்லை.
பயன்கள்
லிங்க வடிவமுள்ள சாலிகிராமத்தையும், ஸ்ரீ சக்கரத்தையும், வலம்புரி சங்கையும் சுத்தமற்றவர் பூஜித்தால் தரித்திரத்தில் தள்ளிவிடும். ஆனால் திருவல சுழி கொண்ட கோமதி சக்கரம் யார் வேண்டுமானாலும் பூஜிக்கலாம். ஆசாரம் ஒரு முக்கியமில்லை. மனமே முக்கியம்.
கோமதி சக்கரம் பயன்படுத்தும் போது சுழி ஆகாயத்தை பார்த்தார் போல் வைக்க வேண்டும். பூஜைக்கு பின் எப்படி வேண்டுமானாலும் வைக்கலாம்.
கோமதி சக்கரம் ஆண்டாண்டு காலமாக பலனளிக்கும். கோமதி சக்கரத்தை யார் தலையில் வைத்தும் ஆசிர்வாதம் செய்யலாம்.
ஸ்ரீராமர் ஆஞ்சநேயர் மூலம் சீதா தேவிக்கு அடையாளம் காட்ட கொடுத்த ரகுவம்ச கணையாழி கோமதி சக்கரம் பதித்தது.
கோமதி சக்கர வழிபாடு ஒருமுறை செய்தாலோ அல்லது நினைவு கூர்ந்தாலே சகல பாவமும் விலகும்.
புண்ணியம் செய்யும் மனிதருக்கே கோமதி சக்கரம் கையில் கிடைக்கும். கங்கை தீர்த்தம் பூஜித்தாலும் அவர்களின் குடும்பத்திலுள்ள பாவ சாபங்களை கங்கை நீர் ஈர்த்துக்கொள்ளும். கோமதி சக்கரம் செல்வ பெருக்கத்தை தொழில் பெருக்கத்தை உண்டாக்கும். நிம்மதியைக் கொடுக்கும்.
இதை எவரும் ஆராதிக்கலாம். இதை வைத்திருந்தாலே நாகதோஷம் விலகும். பரிகார ஷேத்ரம் எங்கும் போக வேண்டியதில்லை. கோமதி சக்கரம் ஒரு உயிர்கல் வகையாகும். வளரக்கூடியதாகும். இது எல்லா அதிஷ்ட கற்களுக்கும் மேலானதாகும். இதன் சுழியை சற்று நேரம் உற்று பார்த்து கொண்டிருந்தாலே சில மாறுதல் மனத்திரையில் தெரிவதை உணரலாம்..
கோமதி சக்கர உதவியால் குறை அகன்று புகழுடனும் நிம்மதியுடனும் வாழலாம். கோமதி சக்கரத்தில் பெயரை ஓதி செம்பு சொம்பில் போட்டு தண்ணீர் ஊற்றி அந்த நீரை விநாயகருக்கு அபிஷேகம் செய்தால் சக்தி பன்மடங்காக உயர்வதைக் காணலாம்.
இந்த முறையில் தொழில் முன்னேற்றமும் குடும்ப மேன்மையும் அடையலாம். பயன்படுத்திய கோமதி சக்கரத்தை குடும்பத்தாருக்கு கொடுக்கலாம். வெளி நபருக்கு கொடுக்ககூடாது. வேண்டுமானால் வேறொன்றை வாங்கிக்கொடுக்கலாம்.
கோமதி சக்கரம் உள்ள இடத்தில் சிவகோபம் சக்தி கோபம் உண்டாவதில்லை. இல்லத்தில் மூதேவி வணக்கத்திற்குரியவளாக மாறுவாள். கோமதி சக்கரத்தில் மகாலட்சுமியின் சின்னம் உள்ளதால் அவ்விடம் குபேர வாசம் உண்டாகும்.
அதிஷ்ட தேவதை தேடிவர காரணம் இக்கோமதி சக்கரம் சுதர்சன சக்கரத்தால் உருவானதால் இது இருக்கும் இடம் தீயசக்தி விலகுவதால் அதிஷ்ட தேவதை தேடிவந்து குடிகொள்கிறாள். இச்சுழி இருக்கும் இடத்தில் குழப்பம் இருப்பதில்லை. தன்னால் ஒரு வழி பிறக்கிறது.
நீத்தாருக்கு திதி கொடுக்காத தோஷம் முதல் கடின தோஷங்கள் இக்கோமதி திருவல சுழியை பயன்படுத்துவதன் மூலம் விலகுகிறது.
கோமதி சக்கரம் உள்ள இடத்தில் கூடுதல் சக்தி பெறுகிறது. அதனால் வாஸ்து குறைகள் யாவும் பாதிப்பதில்லை . தொழில் செய்யும் இடத்தில் ஒரு சிவப்பு துணியில் கோமதி சக்கரம் 13ஐ கட்டி ஈசான்ய பாகத்தில் வைத்தால் அல்லது கல்லா பெட்டியில் வைத்தால் தொழில் பணம் பெருகும்.
கோமதி சக்கரம் உள்ள இடத்தில் வலம்புரி சங்கை சிரமப்பட்டு வாங்க வேண்டிய அவசியமில்லை. கடின சுத்தமும் அவசியமில்லை. எனவே இதை வைத்திருந்தாலே போதும். நற்பலன் விளையும் அசுத்த தீட்டு பாதிக்காது .
கோமதி சக்கரம் ஆத்மாக்கள் ஆகும். அது யாருக்கு வேண்டுமானாலும் உதவி செய்யும். அந்த ஆத்மா கற்களுக்கு இடம் கொடுக்க வேண்டும். 13 கட்டங்களில் உள்ள நாமாக்களை சொல்லி அதனதன் இடத்தில் வைத்துவிட்டால் அது உயிர்ப்புடன் அதனதனுடன் தொடர்புகொண்டு அது உயிர் பெறும்.
படைக்கப்பட்ட உயிர்கள் அத்தனையும் சுழியுடனே படைக்கப்பட்டது. வலசுழி பொருள் எல்லாம் சுபமானது. சக்தி வாய்ந்தது என்பதால் தான் வலம்புரி சங்கு, வலம்புரி விநாயகர் என வலபக்க சக்தி அதிகமாக நேசிக்கப்படுகிறது. தெய்வவலமும் வலபக்கமே சுற்றக் கொண்டிருக்கிறோம்.
பூமியில் மனிதனுக்கு 27 நட்சத்திரங்கள் ஆளுகின்றன. அது ஒவ்வொரு மனிதனுக்கு ஒரு நட்சத்திரத்தை ஒதுக்கி ஆளுகைக்கு உட்படுத்தப்படுகிறது. அது மனிதனின் குறிப்பிட்ட பாகத்தில் நட்சத்திர சக்கரம் மறைந்து செயல்படுகிறது. அவ்விடத்தை கண்டு உணர்ந்து தொட்டால் பலன் பெருகும்.
நட்சத்திரம்
அசுவினி, பரணி, கிருத்திகை-நெற்றி முழுவதும்.
ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை-நெற்றியை தவிர்த்து முகம் முழுவதும்.
புனர்பூசம், பூசம்-இரு தோள்களாகும்.
ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், அஸ்தம்-மார்பு பகுதி.
சித்திரை-வயிறு பகுதி.
சுவாதி, விசாகம் – புஜங்கள் இரண்டு.
அனுசம் – பாலின உறுப்பாகும்.
கேட்டை, மூலம் – இரு கைகளாகும்.
பூராடம், உத்திராடம் – தொடைகள் இரண்டு.
திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி ,ரேவதி-இரு கால்பாதங்களாகும்.
எங்கு வழிபாடு எத்தெய்வத்திற்கு செய்தாலும் நட்சத்திரத்தின் பாகம் எதுவோ அங்கு நினைவுகூர்ந்தோ தொட்டோ வணங்கினால் வேண்டுதல் நிறைவேறும்.
கோமதி சக்கரத்தால் பலன் பெரும் விதம்!
கோமதி யந்திரத்தை சாதாரணமாக கையில் வைத்திருந்தாலே நாம் கோரும் பலன் விரைவில் கிடைக்கும்,
வீட்டின் வாயிலில் 7 கோமதி சக்கரங்களை சிறிய சிகப்பு பட்டு துணியில் கட்டி தொங்கவிட, எதிர்மறை சக்திகள்,கோளாறுகள் விலகி நன்மைகள் பெருகும்.
வீட்டில் பூஜிக்கும் பொழுது 11 கோமதி சக்கரம், 11 மஞ்சள் நிற சோழிகள், குங்குமப்பூ, மஞ்சள் கட்டை, சந்தன கட்டை மற்றும் வெள்ளி நாணயங்கள் வைத்து பூஜிக்க பொருள் வரவு மேம்படும்.
தற்போது மோதிரமாகவும், கழுத்தில் அணியும் செயின் வடிவிலும் கிடைக்கிறது. விலை குறைந்த ஆனால் லட்சுமி அம்சமுள்ள நோய்கள் தீர்க்கவல்ல சிறிய சங்கு போன்ற கல். தொழில் முன்னேற்றம், கண் திருஷ்டி, பில்லி,சூனியம், வியாபார விருத்தி போன்றவற்றிற்கும் மிக சிறந்த தீர்வே இந்த கோமதி சக்கரம்.
வியாபாரத்திற்க்கு ஏழு சக்கரங்களை வைத்து பூஜிக்க செல்வம் பெருகும்.வாஸ்து தோஷம் விலக 11 சக்கரங்களை வீட்டில் வைக்க அல்லது புதைத்து வைக்க வாஸ்து தோஷம் விலகும்.ஜாதகத்தில் சர்ப்ப அல்லது நாக தோஷமுள்ளவர்களுக்கும் இது பரிஹாரமாக விளங்குகம்

அடுத்த பதிவில் வேறொரு மூலிகை பற்றி பார்ப்போம்.

மேலும் மூலிகைகள் மற்றும் சித்த மருந்துகளை பற்றிய உங்களது சந்தேகங்களுக்கும், ஆலோசனைக்கும் தொடர்பு கொள்ளவும்…

இன்னும் அறிவோம்...

இலவச சித்தா, ஆயுர்வேத மருத்துவ ஆலோசனை மற்றும் சந்தேகங்களுக்கு அழைக்கவும்...

பேரன்புடன்….
சுதாகர் G வைத்யா
நாடி பரிசோதனை மற்றும் மருத்துவ ஜோதிட ஆராய்ச்சியாளர்.

பாரம்பரிய மருத்துவத்தில் எங்களின் குறிகோள் உடல் நலம் மற்றும் சுகாதாரத்தை காப்பதே… இங்கு ஆயுர்வேதம், சித்தா, மற்றும் பிற மருத்துவ அறிவியல்களின் ஊடாக நாங்கள் தனிப்பட்ட ஆலோசனைகள், மற்றும் நோய் தீர்க்கும் சிகிச்சைகள், சுகாதாரம் மற்றும் அழகு தொடர்பான சேவைகளை வழங்குகிறோம்.

மேலும் மூலிகைகள் மற்றும் சித்தா, ஆயுர்வேத மருத்துவம் பற்றிய உங்களது சந்தேகங்களுக்கும், ஆலோசனைக்கும் தொடர்பு கொள்ளவும்…
Mayura Ayurvedasram (Vedic Pharmacy)
#40, Old Busstand Commercial Complex,
Vellore - 632 004.  Call : 90430 25336

Mayura Wellness Centre
(Holistic Healing Solutions)
Near Vani Vidyalaya School, 
Katpadi – 632 006.  Call : 90421 35336


#மனம் #ஆயுர்வேதம் #சித்தா #மயூரா #வேலூர்




“மூட்டு அகற்றுவது தீர்வு அல்ல; அதன் இயற்கை இயக்கத்தை மீட்டெடுப்பதே மருத்துவம்.”

மூட்டு வலிக்கு அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வா? உண்மை என்ன சொல்கிறது? ✨ மூட்டு வலி இன்று பலருக்கும் வாழ்க்கைத் தரத்தை குறைக்கும் ஒ...