About Me

My photo
Vellore, Tamil Nadu , India

Sunday, December 28, 2025

“மூட்டு அகற்றுவது தீர்வு அல்ல; அதன் இயற்கை இயக்கத்தை மீட்டெடுப்பதே மருத்துவம்.”

மூட்டு வலிக்கு அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வா?
உண்மை என்ன சொல்கிறது?
✨ மூட்டு வலி இன்று பலருக்கும் வாழ்க்கைத் தரத்தை குறைக்கும் ஒரு பெரும் சவாலாக மாறியுள்ளது.
நடக்க சிரமம், படிகள் ஏற முடியாமை, காலை எழுந்தவுடன் வலி, நீண்ட நேரம் அமர முடியாமை —
இவை அனைத்தும் மூட்டு வலியின் பொதுவான அனுபவங்கள்.
இத்தகைய சூழலில்,
“அறுவை சிகிச்சை (Surgery) தான் ஒரே தீர்வு”
என்று பலருக்கு சொல்லப்படுகிறது.
ஆனால் உண்மையில்,
அது தான் ஒரே வழியா?
மூட்டு வலி – ஒரு நோயா அல்லது ஒரு எச்சரிக்கையா?
பாரம்பரிய மருத்துவ பார்வையில்,
மூட்டு வலி என்பது ஒரு தனி நோயல்ல.

அது, உடலின் உள் சமநிலை குலைந்ததின் அறிகுறி வாதம், கபம், இரத்த ஓட்டம், நரம்புகள் ஆகியவற்றின் பாதிப்பின் வெளிப்பாடு உடல் தன்னை காக்க முயலும்போது,
வலி அதன் மொழியாக வெளிப்படுகிறது. அந்த மொழியை புரிந்து கொள்வதே
உண்மையான சிகிச்சையின் ஆரம்பம்.

🩺 ஆங்கில மருத்துவ அணுகுமுறை – பாரம்பரிய மருத்துவ அணுகுமுறை

⚡ ஆங்கில மருத்துவம்
வலி மற்றும் வீக்கத்தை உடனடியாக கட்டுப்படுத்துதல்
மருந்துகள், ஊசிகள், அறுவை சிகிச்சை (Surgery)
உடனடி நிவாரணம், ஆனால் மீண்டும் வரும் வாய்ப்பு
🌿 பாரம்பரிய மருத்துவம்
நோயின் வேரைக் கண்டறிதல்
உடலின் இயற்கை குணப்படுத்தும் சக்தியை எழுப்புதல்
மெதுவான ஆனால் நீடித்த நலம்

🔍 அறுவை சிகிச்சை (Surgery) ஏன் எப்போதும் முதல் தீர்வாக இருக்கக் கூடாது?
அறுவை சிகிச்சை என்பது,
உடலின் ஒரு பகுதியை மாற்றுவது அல்லது அகற்றுவது.
அது,
ஆரம்ப மற்றும் நடுத்தர நிலையில் உள்ள மூட்டு வலிக்கு
அவசியமில்லை
உடலின் இயற்கை இயக்கத்தை பாதிக்கலாம்
வயதானவர்களுக்கு அபாயம் அதிகமாக இருக்கலாம்
மீண்டும் அறுவை சிகிச்சை தேவைப்படும் வாய்ப்பும் உள்ளது
அதனால் தான்,
அறுவை சிகிச்சை (Surgery)
ஒரு இறுதி கட்ட தீர்வாக மட்டுமே கருதப்பட வேண்டும்.

🌿 “அறுவை சிகிச்சைக்கு முன் ஒரு வாய்ப்பு” – ஏன் முக்கியம்?
மூட்டு வலி ஆரம்ப அல்லது நடுத்தர நிலையில் இருக்கும் போது,
சரியான பாரம்பரிய மருத்துவ ஆலோசனை பெற்றால்,
👉 வலியை குறைக்க முடியும்
👉 மூட்டின் இயக்கத்தை மேம்படுத்த முடியும்
👉 அறுவை சிகிச்சையைத் தவிர்க்கும் வாய்ப்பு உருவாகும்
இந்த “அறுவை சிகிச்சைக்கு முன் ஒரு வாய்ப்பு”
பலரின் வாழ்க்கையை மாற்றியிருக்கிறது.

🌸 இப்போது நாம் என்ன செய்ய வேண்டும்?
மூட்டு வலி வந்தவுடன்,
பயப்பட வேண்டாம்
உடனே அறுவை சிகிச்சைக்கு தயாராக வேண்டாம்
முதலில், ✔ உடலை புரிந்து கொள்ளுங்கள்
✔ அதன் சமநிலையை மதியுங்கள்
✔ இயற்கை சார்ந்த வழிகளை அறிந்துக்கொள்ள
உங்களுக்கு அல்லது உங்கள் குடும்பத்தில் யாருக்காவது மூட்டு வலி இருக்கிறதா?
அறுவை சிகிச்சை (Surgery) குறித்து குழப்பமா?
👉 அறுவை சிகிச்சைக்கு முன் ஒரு வாய்ப்பு
👉 சரியான பாரம்பரிய மருத்துவ ஆலோசனை
இவற்றை அறிந்து கொள்ள,
மயூரா ஆயுர்வேதாஸ்ரமத்தில் முன்பதிவு செய்யுங்கள்.

📍 மயூரா ஆயுர்வேதாஸ்ரம்
📞 அப்பாயிண்ட்மெண்ட் மட்டும் – முன்பதிவு அவசியம் கொள்ளுங்கள்
📞9042135336
✨ மயூரா ஆயுர்வேதாஸ்ரமத்தின் பார்வை
மூட்டு வலி மருந்தால் மட்டும் தீராது.
அறுவை சிகிச்சையும் முதல் தீர்வாக இருக்கக் கூடாது.
உடல் தனது இயற்கை சமநிலையை மீண்டும் பெறும் போது,
நலம் தானாகவே மலரத் தொடங்குகிறது.
அந்த சமநிலையை, இயற்கை மூலிகைகள்,
பாரம்பரிய சிகிச்சை முறைகள்,
உணவு மற்றும் வாழ்க்கை முறை வழிகாட்டுதல்,
மற்றும் தேவையான இடங்களில்
வேத ஜோதிடத்தின் கால வழிகாட்டுதல்
இவற்றின் மூலம் வழங்குவதே
மயூரா ஆயுர்வேதாஸ்ரத்தின் சேவைத் தத்துவம்.

 “மூட்டு அகற்றுவது தீர்வு அல்ல;
அதன் இயற்கை இயக்கத்தை மீட்டெடுப்பதே மருத்துவம்.”

 “இயற்கையோடு இணைந்த மருத்துவமே
நிரந்தர ஆரோக்கியத்தின் அடித்தளம்.”

Monday, December 22, 2025

நவ கிரகங்களும்,நோய்களும்...

நவ கிரகங்களும் நோய்களும்... 
நவகிரகங்களின் கட்டுப்பாட்டில் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களும் இருக்கின்றனர். நவகிரகங்களும் 12 ராசிகள் 27 நட்சத்திரங்களை கட்டுப்படுத்துகின்றன. ராகு கேது தவிர சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய கிரகங்கள் மனித உடம்பின் பாகங்களை கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. எந்த கிரகம் பாதிக்கப்படுகிறதோ அந்த கிரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள உடலின் பாகம் பாதிக்கப்படும். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களும் நவகிரகங்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்றனர். எந்த கிரகம் பாதிக்கப்படுகிறதோ அந்த கிரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள உடலின் பாகம் பாதிக்கப்படும்.
 சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்ரன், சனி, ராகு கேது என நவகிரகங்களால் ஏற்படும் நோய்களையும் குணப்படுத்த செய்யும் பரிகாரங்களையும் பார்க்கலாம்.

ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து ஆறாம் இடம் ருண ரோக சத்ரு ஸ்தானம். ஒருவருக்கு எப்படிப்பட்ட நோய் வரும், அந்த நோய் எளிதில் தீருமா, அல்லது கடனாளி ஆக்கி விடுமா என்று ஆறாமிடத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
நோய் தொற்று பரவும் இன்றைய கால கட்டத்தில் யாரை எந்த நேரத்தில் நோய் தாக்குகிறது என்று சொல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. உடம்பில் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரித்துக்கொண்டால் நோய் வராமல் தடுக்கலாம். நோய் வந்தாலும் எளிதில் குணமடையும். நவகிரகங்களில் எந்த கிரகம் பாதிக்கப்பட்டால் என்ன நோய் வரும் என்று பார்த்து அதற்கேற்ப பரிகாரம் செய்தால் நோய்களில் இருந்தும் தப்பிக்கலாம்.

நோய்களும் கிரகங்களும்...

நோய்களும் கிரகங்களும்
தலை, இருதயம் சூரியனின் கட்டுப்பாட்டிலும், முகம், தொண்டை சந்திரன் கட்டுப்பாட்டிலும், கைகள், தோள்கள் செவ்வாயின் கட்டுப்பாட்டிலும், மார்பு புதன் கட்டுப்பாட்டிலும் உள்ளது. வயிறு, உடல் தோல் பாகம் குருவின் ஆதிக்கத்திலும் அடிவயிறு, பிறப்பு உறுப்பு சுக்கிரன் கட்டுப்பாட்டிலும் உள்ளது. அதே போல தொடை, கால்,பாதம் சனியின் ஆதிக்கத்தின் கீழும் வரும். இராகு, கேதுக்கள் நிழல் கிரகம் என்பதால் மனித உடலில் இடம் கொடுக்கப்படவில்லை.

நோய் எதிர்ப்பு சக்தி
ஜாதகத்தில் 6 ஆம் பாவாதிபதியுடன் எந்த கிரகம் சேர்க்கை பெற்று இருந்தாலும் அந்த கிரகத்திற்குரிய நோய்கள் வரக்கூடும். ஒருவரின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க நவகிரக வழிபாடு அவசியம். முக்கியமாக குரு, சூரியனை வழிபட வேண்டும். உடல் கட்டமைப்பு மற்றும் எலும்பின் காரகர் சனி பகவான் ஆவார். அவர் நல்ல நிலையில் ஜாதகத்தில் இருந்தாலே நோய்கள் எட்டிப்பார்க்காது.

சூரியன்

ஜாதகத்தில் சூரியன் பாதிக்கப்பட்டால் மலச்சிக்கல், அஜீரணம், தூக்கமின்மை, கண் நோய்கள், ரத்த அழுத்தம், இதய நோய், ஆஸ்துமா, வயிற்றில் பூச்சிகள் போன்ற நோய் களையும் ஜுரம் போன்றவை ஏற்படும்.

சந்திரன்

ஜாதகத்தில் சந்திரன் பாதிக்கப்பட்டால் மனநோய்கள், உணர்ச்சி வசப்படுதல், அதிவேக இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம், காச நோய், ரத்த சோகை, சளி, கபம், பாலியல் நோய்கள் இரைப்பைப் புண், நீரிழிவு, குடல் புண் ஏற்படும்.

செவ்வாய்

ஜாதகத்தில் செவ்வாய் பாதிக்கப்பட்டால் மூலநோய், நீரிழிவு, இரைப்பை மற்றும் குடல் நோய்கள், மன அழுத்தம், தோல் வியாதிகள், இதய நோய், நரம்புத் தளர்ச்சி, அம்மை, விபத்து மற்றும் ஆயுதங்களால் பாதிக்கப்படும்.


புதன்

ஜாதகத்தில் புதன் பாதிக்கப்பட்டிருந்தால் இதய நோய்கள், ரத்த அழுத்தம், வயிற்றுப்புண், புற்றுநோய், தோல் நோய்கள், நரம்பு தளர்ச்சி, இரைப்பை புண் ஏற்படும்.

குரு

ஜாதகத்தில் குரு பாதிக்கப்பட்டால் தொண்டை சம்பந்தமான நோய்கள், தைராய்டு, அம்மை, முடக்கு வாதம், காமாலை, நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகள், பக்க வாதம், கீழ் வாதம், நீரிழிவு நோய் ஏற்படும்.

சுக்கிரன்

ஜாதகத்தில் சுக்கிரன் பாதிக்கப்பட்டால் கண், காது, மூக்கு நோய்கள். நுரையீரல் நோய், இருமல், குடல்புண், இருதய நோய், ரத்த அழுத்தம், பாலியல் தொடர்பான நோய்கள் ஏற்படும்.

சனி

ஜாதகத்தில் சனி பாதிக்கப்பட்டால் மனநோய், கை கால் வலிப்பு, மூளை பாதிப்பு, தோல் நோய், நீண்ட கால வியாதிகள், சிறுநீரக நோய், பித்தம், குடல் நோய், விபத்தால் பாதிக்கப்படும்.

ராகு - கேது

ராகு பாதிக்கப்பட்டால் அதிக அமிலம் சுரத்தல், வயிறு கோளாறுகள், அஜீரணம், தூக்கமின்மை, மூளை நோய், குடல் புண், தோல் வியாதிகள் ஏற்படும். அது போல கேது பாதிக்கப்பட்டால் புற்றுநோய், வாதம், தோல் நோய்கள், காலரா, நரம்புத் தளர்ச்சி, சிறுநீரகக் கோளாறு ஏற்படும்.


நவ கிரக வழிபாடு :

நோய்களில் இருந்து தப்பிக்க குரு, சூரியன் சந்திரன் இவர்களை வழிபடுவது சிறந்த பலனளிக்கும்.
 தேவ மருத்துவரான தன்வந்திரி வழிபாடு மிகச்சிறந்த நோய் எதிர்ப்பாற்றலை ஏற்படுத்தும். புதன் மற்றும் வியாழன் கிழமைகளில் தன்வந்திரி வழிபாடு செய்யலாம்.


குல தெய்வ வழிபாடு:

உடம்பில் நோய் பாதிப்பு குறைந்து நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்க குல தெய்வ வழிபாடு அவசியம். குல தெய்வ கோவிலுக்கு சென்று வழிபட்டு வருவது சிறந்த நோய் எதிர்ப்பாற்றலை ஏற்படுத்தும். அமாவாசை நாட்களில் பித்ரு வழிபாடு எனும் முன்னோருக்கு செய்யும் திதிகளை சரியாக செய்தாலே நோய்கள் பாதிப்பு ஏற்படாது. தினசரியும் சூரிய நமஸ்காரம் செய்வது சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை தரும்.

தீராத நோய் தீர்க்கும் பரிகாரம்
செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமை அன்று அம்மன் கோவிலுக்கு சென்று கொடி மரத்தின் முன்பாக உங்கள் கையாலேயே கல் உப்பை கொட்டி வர, உங்களது உடலில் இருக்கும் நோய் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. வாரம் தோறும் வரும் வெள்ளிக்கிழமை அன்றும் செவ்வாய்க் கிழமை அன்றும் அம்மனுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வைத்துவிட்டு, உங்கள் கையால் உப்பைக் கொட்டி வந்தால் நிச்சயம் உங்களுடைய ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தெரியும். மருத்துவ சிகிச்சை தொடர்ந்து செய்ய நோய்கள் எளிதில் குணமடையும்.

பழனி முருகன் சந்தனம்: 

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக போற்றப்படும் பழனிக்கு சென்று முருகப்பெருமானை காலை 4.00 மணி அளவில் பிரம்ம முகூர்த்தத்தில் தரிசனம் செய்ய வேண்டும். அந்த சமயத்தில், கோவிலுக்கு வருகை தரக்கூடிய பக்தர்களுக்கு சந்தனத்தை பிரசாதமாக கொடுப்பார்கள். இந்த சந்தனத்தை எடுத்து நெற்றியில் இட்டுக் கொள்ளலாம். அதில் இருந்து ஒரு சொட்டு சந்தனத்தை எடுத்து தண்ணீரில் கலந்து பருக நோய்கள் நீங்கும். 
பழனி முருகனின் சிலையில் இருந்து சந்தனம் மொத்தமாக தான் எடுத்து பக்தர்களுக்கு வினியோகம் செய்யப்படும். முருகனின் தொப்புள் பகுதியில் இருக்கக்கூடிய சந்தனம் எவருக்கு கிடைக்கின்றதோ அவர்கள் அதிர்ஷ்டசாலிகள். நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்பவர்களுக்கு சரும நோய்களும், உடல் நலக்கோளாறுகளும் எளிதில் நீங்கும்.

இன்னும் அறிவோம்...

சித்தா, ஆயுர்வேத மருத்துவ ஆலோசனை மற்றும் சந்தேகங்களுக்கு அழைக்கவும்...

பேரன்புடன்….
சுதாகர் G வைத்யா
நாடி பரிசோதனை மற்றும் மருத்துவ ஜோதிட ஆராய்ச்சியாளர்.

பாரம்பரிய மருத்துவத்தில் எங்களின் குறிகோள் உடல் நலம் மற்றும் சுகாதாரத்தை காப்பதே… இங்கு ஆயுர்வேதம், சித்தா, மற்றும் பிற மருத்துவ ஜோதிட அறிவியலின் ஊடாக நாங்கள் தனிப்பட்ட ஆலோசனைகள், மற்றும் நோய் தீர்க்கும் சிகிச்சைகள், சுகாதாரம் மற்றும் அழகு தொடர்பான சேவைகளை வழங்குகிறோம்.

மேலும் மூலிகைகள் மற்றும் சித்தா, ஆயுர்வேத மருத்துவம் பற்றிய உங்களது சந்தேகங்களுக்கும், ஆலோசனைக்கும் தொடர்பு கொள்ளவும்…
Mayura Vedic Pharmacy
#40, Old Busstand Commercial Complex,
Vellore - 632 004.  Call : 90430 25336

Mayura Vaidya Salai
(Holistic Healing Solutions)
Near Silkmill Bus stop, 
Katpadi – 632 006.  Call : 90421 35336


#அக்கறை #உடலும் #உயிரும் #மனம் #மயூரா #ஆயுர்வேதம் #சித்தா #நாடிபரிசோதனை #மருத்துவஜோதிடம் #வேலூர்

https://mayuraayur.com/pages/appointment




 

Tuesday, December 9, 2025

"ஏழு நிமிடத்தில் மறைந்த தலைவலி" -மஹாசிரசு (Mahasirs Mudra) முத்திரை தியானம்... உடல்–மனம்–உயிர் சமநிலையை சீரமைக்கும் சக்திவாய்ந்த இயற்கை மருத்துவம்.


"ஏழு நிமிடத்தில் மறைந்த தலைவலி"  -முத்திரை சிகிச்சை

 

முத்திரை தியானத்தின் அற்புத சக்தியை கண்டறிந்த தருணம்

மயூரா ஆயுர்வேதாஸ்ரமத்தில் சமீபத்தில் ஒரு நோயாளர் வந்தார்.
பல ஆண்டுகளாக தீராத ஒற்றைத் தலைவலி (Migraine)
பல மருத்துவர்களை அணுகியும், பல வகை சிகிச்சைகளை எடுத்தும்—
தற்காலிக நிவாரணம் தவிர எந்த மாற்றமும் இல்லை.

அவரின் நிலை மிகக் கடினமாக இருந்தது;
👉 தலை வெடிக்கும் போல வலி
👉 குமட்டல், வாந்தி வரும் உணர்வு
👉 ஒளி மற்றும் சத்தத்திற்கு மிகுந்த எரிச்சல்

நோயாளியின் உடல் நிலையைப் பார்த்தபோது,
நாம் வழங்கும் பாரம்பரிய முத்திரை தியான சிகிச்சை அவருக்கு சிறந்ததாக இருக்கும் என்று உணர்ந்தேன்.

நான் அவரிடம் சொன்னேன்:

“ஏழு நிமிடங்கள் அமைதியாக அமர்ந்து இந்த முத்திரையைப் போடுங்கள்.
ஆழ்ந்து மூச்சை இழுத்து நிதானமாக விடுங்கள்
.”

🕉 மஹாசிரசு முத்திரை முறை

  • இரு கைகளின் மோதிர விரல்களை உள்ளங்கையின் நடுவில் மடக்கி வைக்கவும்
  • சுண்டுவிரல் மட்டும் நேராக உயர்த்தி வைத்துக் கொள்ளவும்
  • மற்ற மூன்று விரல்களையும் இணைக்கவும்
  • முதுகு நேராக
  • கைகளை தோள்மீது மெதுவாக வைத்து அமரவும்

அவர் ஏழு நிமிடங்கள் முத்திரையை செய்தார்.
முடிவில் கண் திறந்தபோது அதிர்ச்சி கலந்த சந்தோஷத்துடன்,

“எனக்கு எழுபது சதவீதம் வலி குறைந்துவிட்டது!” என்று கூறினார்.
குமட்டல் முழுமையாக மறைந்து இருந்தது.

அன்று மாலை மீண்டும் வந்தபோது அவர் சொன்ன வார்த்தைகள்—

“சார்… மனமே லேசாகிவிட்டது.
இது போன்ற முத்திரைகளை நான் தினமும் செய்யப் போகிறேன்.
நான் பல வருடங்களாக தேடிய நிவாரணம் இப்போது தான் கிடைத்தது.”

இந்தச் சிறிய முத்திரை,
உடலின் உயிர் நுட்ப நரம்புகளையும் பிராண ஓட்டத்தையும் சீரமைக்கிறது.
மிகக் குறைந்த நேரத்தில் கிடைக்கும் மிகப் பெரிய நிவாரணம்.


🌾 மயூரா ஆயுர்வேதாஸ்ரமத்தில் – முத்திரை தியான சிகிச்சை

ஒவ்வொரு நோயுக்கும் தனிப்பட்ட முத்திரைகள் வழங்கப்படுகின்றன:

✔ தலைவலி / மைக்ரேன்
✔ நரம்பு பலவீனம்
✔ மனஅழுத்தம் – Anxiety
✔ மூச்சு பிரச்சினைகள்
✔ தூக்கமின்மை
✔ ஜீரண கோளாறுகள்
✔ தோஷ சமநிலை பிரச்சனைகள் (Vata–Pitta–Kapha)

இந்த முத்திரை தியானங்கள்,
உடல்–மனம்–உயிர் சமநிலையை சீரமைக்கும் சக்திவாய்ந்த இயற்கை மருத்துவம்.


📍 Mayura Ayurvedasram

Vaidya Salai, Katpadi
📞 90421 35336

Vedic Pharmacy, Vellore
📞 90430 25336


✒️ சுதாகர் G வைத்யா
Traditional Healer | Nadi Pariksha | Medical Astrology | Mudra Therapy | Ayurvedic System



“மூட்டு அகற்றுவது தீர்வு அல்ல; அதன் இயற்கை இயக்கத்தை மீட்டெடுப்பதே மருத்துவம்.”

மூட்டு வலிக்கு அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வா? உண்மை என்ன சொல்கிறது? ✨ மூட்டு வலி இன்று பலருக்கும் வாழ்க்கைத் தரத்தை குறைக்கும் ஒ...