About Me

My photo
Vellore, Tamil Nadu , India

Tuesday, September 28, 2021

சித்தர்களும், சித்த மருத்துவமும்...

மயூரா ஆயுர்வேதாஸ்ரம் 1998ஆம் ஆண்டு துவங்கப்பட்ட நிறுவனம்….

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்.

மயூரா ஆயுர்வேதாஷ்ரம் 1998ஆம் ஆண்டு துவங்கப்பட்ட நிறுவனம்.

உங்களின் அனைத்து சித்தா மற்றும் ஆயுர்வேத தேவைகளையும் பூர்த்தி செய்ய நன்கு அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள்,ஆலோசனை, சிகிச்சை, மருத்துவ ஜோதிடம் மயூரா ஆயுர்வேதாஷ்ரமத்தில் வழங்கபடுகிறது.

சித்த,ஆயுர்வேத மருத்துவமும், மருந்துகளும்.

“கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழ்குடி” எனும் வாக்கியம் தமிழ் மொழிக்கு மட்டுமல்லாது தமிழ் மருத்துவமாம் சித்த மருத்துவத்திற்கும் அப்பழுக்கற பொருந்தும். அனைத்து மருத்துவத்திற்கும் தாய் மருத்துவமாய் விளங்குகிறது நம் தமிழ் மருத்துவம். இத்தகைய சித்த மருத்துவம் ஆதி சித்தன் சிவன் வழியாய் இம்மண்ணுலகம் பயன்பெற 18 சித்தர்கள் மூலம் உலகுக்கு அளிக்கப்பட்டது. சித்த மருத்துவம் என்பது மனிதனின் பொய்யுடலாகிய உயிர்நிலை வரையும் சென்று செயல்படுவது இதன் சிறப்பியல்பு. இன்று கடவுள் துகளை கண்டறிந்ததாக விஞ்ஞானிகள் கூறும் நிலையில்,


“அணுவில் அணுவினை ஆதிப் பிராணை

அணுவில் அணுவினை ஆயிரம் கூறிட்டு.”


என்று திருமூலர் கூறியுள்ளார். சித்த மருத்துவம் நாடி பரிசோதனை மூலம் மனிதனின் உடலில் ஏற்படும் பிணிக்கான மூலக் காரணத்தை கண்டறிந்து நோய் முற்றிலும் தீர்ப்பதில் தனித்துவம் பொருந்தி விளங்குவது போல் நோய் வராமல் தடுக்கும் வழிமுறைகளையும் இப்பிறவியின் பயனாகிய இறையை அடையும் நிலையையும் மெய்யுற விளக்குகிறது, எந்நெடுங்காலமானாலும் அழிக்க முடியாத நம் சித்த மருத்துவமானது மனிதன் தன் தாயின் கருவில் உயிர் கொண்டது முதல் தன் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் பயன்படுகிறது. தனக்கென தனிச்சிறப்போடு விளங்கும் சித்த மருத்துவத்தை நாம் அனைவரும் பயன்படுத்தி நோயில்லா பெருவாழ்வு வாழ்வோம்.


எங்கள் நிறுவனத்தின் குறிகோள் உடல் நலம் மற்றும் சுகாதாரத்தை காப்பதே… இங்கு ஆயுர்வேதம், சித்தா, மற்றும் பிற மருத்துவ அறிவியல்களின் ஊடாக நாங்கள் தனிப்பட்ட ஆலோசனைகள், மற்றும் நோய் தீர்க்கும் சிகிச்சைகள், சுகாதாரம் மற்றும் அழகு தொடர்பான சேவைகளை வழங்குகிறோம்.


சித்த மருத்துவம் பற்றியும் இங்கு பதிவிடப்படும் தகவல்களை பற்றியும் படித்து பயன்பெற எங்கள் இணையதள பக்கத்தை தொடர வேண்டுகிறோம்.

Visit Online Store : www.mayuraayur.com

Mayura Ayurvedasram

Siddha & Ayurvedha Pharmacy

#40, Old Busstand Commercial Complex,

Near Thiruvalluvar Statue,

Anna Salai. Vellore – 632 004

Call :90430 25336

Mayura Wellness Clinic

#19, 10th East Main Road,

Opp EB Office, Katpadi – 632 006

Call : 90421 35330









MAYUR AYURVEDASRAM : AYURVEDIC MEDICINE ONLINE STORE Largest Online Ayurvedic Medicine Store in India

      The Mayura Ayurvedasram online Ayurvedic medicine store aims to bring the benefits of authentic, time tested science that has its roots in India to your doorstep.

      With user friendly portal, safe packaging and quick delivery we are proud to serve you in your journey towards holistic health and living.

India’s Best Online Store for Ayurvedic Medicines & Ayurvedic Products

     Mayura Ayurvedasram, the online ayurvedic store sells all kind of ayurvedic medicines and ayurvedic products from India’s top most ayurvedic brands like IMPCOPS, SKM, DABUR, AVP, AVN, HIMALAYA, ZANDU AYURVEDA  &  ALARSIN etc.,

     Our aims to bring the world of authentic ayurvedic herbs and ayurvedic medicines to your doorstep within the shortest delivery time possible.





Thursday, September 23, 2021

ஆகாயத்தில் பறக்கும் சக்தியை தரும் ஆகாஷ் முத்திரை...

 ஆகாஷ் முத்திரை!!!

(உயர்ந்த நல்ல எண்ணங்களை வெளிப்படுத்தும் அருமையான முத்திரை)




நமது பெருவிரல் நுனியும் நடு விரல் நுனியும் தொடும்படியும், மற்ற விரல்கள் நேராக நீட்டியும் வைத்துக்கொள்ளவேண்டும்.

இந்த முத்திரையை தினமும் அதிக பட்சம் 45 நிமிடங்களும், குறைந்த பட்சம் 15 நிமிடங்களாவது செய்வது நல்ல பலனைத் தரும். இந்த முத்திரைப் பயிற்சி எந்த நேரத்திலும் செய்யலாம். இந்த முத்திரை பயிற்சி காலை/மாலை 2 மணி முதல் 6 மணிக்குள் எந்த நேரத்தில் செய்தாலும் அதிக பலன் தரும்.

இந்த முத்திரை பயிற்சி உடல் உறுப்புகளின் வெற்றிடத்தை அதிகப்படுத்தி நன்றாக இயங்கச்செய்கிறது. அதாவது நமது மண்டையோடு (கபாலம்), மூக்கின் பின்புறம், சைனஸ் பாதை, காது, வாய், தொண்டை மற்றும் வயிறு பாகங்களில் வெற்றிடம் உள்ளது. தேவையான வெற்றிடம் இருப்பதால் அது நன்றாக இயங்குகிறது. அந்த இடத்தில் அதிகமாக தண்ணீரோ அல்லது காற்றோ அடைத்துக்கொண்டால் அந்த உறுப்புகள் இயங்குவதில் பிரச்சனையும் நோயும் வருகிறது. இந்த முத்திரை பயிற்சி தேவையான வெற்றிடத்தை ஏற்படுத்தி நன்றாக இயங்கவைக்கிறது. இந்த முத்திரை நல்ல எண்ணங்களை மனதில் உருவாக்குகின்றது.

இந்த முத்திரையை உட்கார்ந்து கொண்டு செய்யவேண்டும். நடந்து கொண்டு செய்யக்கூடாது.



ஆகாஷ் முத்திரையினால் ஏற்படும் நல்ல விளைவுகள்:

மனதில் தீய எண்ணங்கள், கெட்ட உணர்ச்சிகள் ஏற்படுவதை கட்டுப்படுத்துகிறது.

மனதில் தேவையில்லாமல் ஏற்படும் பயம் கோபம் இவைகளை குறைத்து மனதில் நல்ல எண்ணங்களை ஏற்படுத்தி மகிழ்ச்சியையும் ஆனந்தத்தையும் கொடுக்கிறது.

இந்த முத்திரை பயிற்சியில் தியானம் செய்தால் மன ஒருமைப்பாட்டுடன் தியானம் முழுமையாக செயல்படும். உயர்ந்த எண்ணங்களை வெளிப்படுத்தும்.

இந்த முத்திரை பயிற்சி தொடர்ந்து செய்தால் பொது நிலைப்புலன் உணர்வுக்கு அப்பாற்பட்ட முன்னோக்கு தெரியும் சக்தி (ESP- EXTRA SENSORY PERCEPTION) கிடைக்கும்.

உடலில் உள்ள தேவையற்ற கெட்ட சக்திகள் (TOXIN) வியர்வை, சிறுநீர், மலம் வழியாக வெளியேறும்.

உடலும் உறுப்புகளும் கனமாக இருப்பது போன்ற நிலைகளை போக்கும்.

சைனஸ் தொந்தரவுகளை குணப்படுத்தும்.

தலைவலி மற்றும் காது வலிகளை குணப்படுத்தும்.

நெஞ்சு கனமாக இருப்பது போன்ற உணர்வுகளை நீக்கும்.

நெஞ்சு படபடப்பை குறைக்கும்.

உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும்.

அதிகமாக சாப்பிட்டதால் ஏற்படும் தொந்தரவுகளை போக்கும்.

கால்சியம் சத்து அதிகரித்து எலும்புகள் வலுப்பெறும்.

இந்த முத்திரை பயிற்சியால் உடல் உள் உறுப்புகள் அனைத்தும் நன்றாக இயங்குகின்றது.



இதயத்தின் செயல்திறனை அதிகரிக்கும்.
Increase efficiency of the heart.

கால்சியம் குறைபாட்டிற்கு நல்ல சிகிச்சை.

Good treatment for calcium deficiency.


எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது.

Helps to strengthen the bones.

தன்னம்பிக்கையை உயர்த்தவும்.

Raise self confidence.

காது பிரச்சனைகள் குணமாகும்.

Ear problems will be cured.


முழுமையின் திருப்தியை வழங்குகிறது.

Provides the satisfaction of completeness.


மேலும் மூலிகைகள் மற்றும் சித்த மருந்துகளை பற்றிய உங்களது சந்தேகங்களுக்கும், ஆலோசனைக்கும் தொடர்பு கொள்ளவும்…

Mayura Sudhakar G

Consultant 

Mayura Wellness Clinic

Healing solutions for General Wellness
97862 25999 



Wednesday, September 22, 2021

வாழ்க்கையை மேம்படுத்தும் பிராண முத்திரை...


           சித்தர்களின் ஞானம் மற்றும் தற்போதைய நவீன விஞ்ஞானத்தின் கலவையான யோகா, மற்ற உடற்பயிற்சிகளை விட உங்களுக்கு பல வித நன்மைகளை அளிக்கும். யோகா என்றால் வெறும் ஆசனங்களும் இருக்கைகளும் மட்டுமல்ல. சிலருக்கு மட்டும் தெரிந்த முத்திரைகளும் கூட யோகாவில் உள்ளது. இந்த யோகாசன முத்திரைகளும் கூட நீங்கள் வியக்கும் படியான உடல்நல பயன்களை அளிக்கிறது. 




            ஒவ்வொரு யோகாசன முத்திரையும் தனித்துவம் பெற்றது. அதனால் அவைகளை சரியான வழியில் செய்திட வேண்டும். இந்த ஒவ்வொரு முத்திரைகளுக்கும் உள் அர்த்தங்கள் உள்ளது.




        வாழ்க்கையை குறிக்கும் முத்திரை இது. எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செய்யக்கூடிய முத்திரை இது. இந்த யோகாசன முத்திரை உங்கள் செரிமான அமைப்பை மேம்படுத்தி, உங்கள் கண்பார்வையின் கூர்மையை அதிகரித்து, சோர்வை எதிர்த்து ஆற்றல் திறனுடன் வைத்திருக்க உதவும்.




நீரிழிவு
விறுவிறுப்பு  
உடற்தகுதி
கண்கள்
இரத்தம்
மூச்சுக்குழாய் 
நோய்கள்

Diabetes
Brisk 
Fitness 
Eyes
Blood
BronchialDiseases

பேரன்புடன்….
சுதாகர் G வைத்யா
மயுரா ஆயுர்வேதாஸ்ரம்
நாடி பரிசோதனை மற்றும் மருத்துவ ஜோதிட ஆராய்ச்சியாளர்.

பாரம்பரிய மருத்துவத்தில் எங்களின் குறிகோள் உடல் நலம் மற்றும் சுகாதாரத்தை காப்பதே… இங்கு ஆயுர்வேதம், சித்தா, மற்றும் பிற மருத்துவ அறிவியல்களின் ஊடாக நாங்கள் தனிப்பட்ட ஆலோசனைகள், மற்றும் நோய் தீர்க்கும் சிகிச்சைகள், சுகாதாரம் மற்றும் அழகு தொடர்பான சேவைகளை வழங்குகிறோம்.

மேலும் மூலிகைகள் மற்றும் சித்தா, ஆயுர்வேத மருத்துவம் பற்றிய உங்களது சந்தேகங்களுக்கும், ஆலோசனைக்கும் தொடர்பு கொள்ளவும்…

Mayura Ayurvedasram
(Siddha & Ayurvedha)
#40, Old Busstand Commercial Complex,
Near Thiruvalluvar Statue,
Anna Salai. Vellore – 632 004
Call :90430 25336

Mayura Ayurvedasram 
(Holistic Healing Solutions)
Near Vani Vidyalaya School 
V.G.Nagar, Katpadi – 632 006
Call : 90421 35336


#மனம் #ஆயுர்வேதம் #சித்தா #மயூரா #வேலூர்





        

Tuesday, September 21, 2021

சிவனுக்கு மட்டுமல்ல... ரமணருக்கும் பிடித்த வில்வம்...

 சிவனுக்கு மட்டுமல்ல... ரமணருக்கும் பிடித்த வில்வம்...



பசியில்லாமல் இருந்த சுவாமி ரமண மகரிஷிகளுக்கு சித்தர்கள் அருளிய   வில்வாதி லேகியம்...

https://bit.ly/3tYOgl0

சித்த மருத்துவத்தில், பித்தத்தைத் தணிக்கும் மிக முக்கியமான மூலிகை வில்வம். பல்லாயிரம் ஆண்டுகளாகத் தமிழ் மண்ணில் இருந்துவரும் அரிய மரங்களில் ஒன்று. பண்டைய நாட்களில், `பழங்களின் ராஜா’ எனப் போற்றப்பட்டதும் வில்வம் பழம்தான். வில்வ மரத்தின் இலை, பட்டை, பழம், வேர் அனைத்துமே மருத்துவக் குணம்கொண்டவை.

வில்வம், மஹாவில்வம் என இதில் இரண்டு வகைகள் உண்டு. பெரும்பாலும், மருத்துவத்துக்கு வில்வமே பயன்படுகிறது. சர்க்கரைநோய், வயிற்றுப்போக்கு, பித்தக் கிறுகிறுப்பு, தலைசுற்றல், ஒவ்வாமை (அலர்ஜி), அஜீரணம், வயிறு உப்புசம் எனப் பல நோய்களுக்கும் வில்வம் மிகச் சிறந்த மருந்து.

வில்வம்... விசேஷம்!

நாள்பட்ட ஒவ்வாமை நோய் (Atopy), மூக்கில் நீர்வடிதல், நீரேற்றம் உள்ளிட்ட நோய்களுக்கு வில்வ இலை, வேம்பு இலை, துளசி இலை மூன்றையும் சமபங்கு எடுத்து, நிழலில் உலர்த்திப் பொடித்துக்கொள்ள வேண்டும். இதில் அரை டீஸ்பூன் அளவுக்கு எடுத்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால், படிப்படியாக நீரேற்றம் குறையும். ஒவ்வாமையினால் வரும் சைனசிடிஸ் மற்றும் உடல் அரிப்பும் குறையத் தொடங்கும்.

வயிற்றுப் புண்களுக்கு (கேஸ்ட்ரிக் அல்சர்) வில்வம் பழம் சிறந்த மருந்து. இதன் துவர்ப்புத் தன்மையும் மலமிளக்கித் தன்மையும் பசியை உண்டாக்கும்.

அஜீரணம், வயிற்று உப்புசம் இரண்டுக்கும் வில்வப் பட்டையைக் கொண்டு செய்யும் வில்வாதி லேகியம் நல்மருந்து.

சர்க்கரை நோயாளிகள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க, வில்வம் ஓர் அற்புத மூலிகை.

வில்வ இலை, வில்வம் பழம் இரண்டும் குழந்தைகளுக்கு வயிற்றுப் புழுக்களால் ஏற்படும் பேதிக்கு அருமருந்து.

வில்வம் சிவனுக்கு மட்டுமல்ல... நம் ஆரோக்கியத்துக்கும் விசேஷம்!

மேலும் மூலிகைகள் மற்றும் சித்த மருந்துகளை பற்றிய உங்களது சந்தேகங்களுக்கும்,ஆலோசனைக்கும் தொடர்பு கொள்ளவும்…


இன்னும் அறிவோம்...

இலவச சித்தா, ஆயுர்வேத மருத்துவ ஆலோசனை மற்றும் சந்தேகங்களுக்கு அழைக்கவும்...

பேரன்புடன்….
சுதாகர் G வைத்யா
நாடி பரிசோதனை மற்றும் மருத்துவ ஜோதிட ஆராய்ச்சியாளர்.

பாரம்பரிய மருத்துவத்தில் எங்களின் குறிகோள் உடல் நலம் மற்றும் சுகாதாரத்தை காப்பதே… இங்கு ஆயுர்வேதம், சித்தா, மற்றும் பிற மருத்துவ அறிவியல்களின் ஊடாக நாங்கள் தனிப்பட்ட ஆலோசனைகள், மற்றும் நோய் தீர்க்கும் சிகிச்சைகள், சுகாதாரம் மற்றும் அழகு தொடர்பான சேவைகளை வழங்குகிறோம்.

மேலும் மூலிகைகள் மற்றும் சித்தா, ஆயுர்வேத மருத்துவம் பற்றிய உங்களது சந்தேகங்களுக்கும், ஆலோசனைக்கும் தொடர்பு கொள்ளவும்…
Mayura Ayurvedasram (Vedic Pharmacy)
#40, Old Busstand Commercial Complex,
Vellore - 632 004.  Call : 90430 25336

Mayura Wellness Centre
(Holistic Healing Solutions)
Near Vani Vidyalaya School, 
Katpadi – 632 006.  Call : 90421 35336


#மனம் #ஆயுர்வேதம் #சித்தா #மயூரா #வேலூர்



“மூட்டு அகற்றுவது தீர்வு அல்ல; அதன் இயற்கை இயக்கத்தை மீட்டெடுப்பதே மருத்துவம்.”

மூட்டு வலிக்கு அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வா? உண்மை என்ன சொல்கிறது? ✨ மூட்டு வலி இன்று பலருக்கும் வாழ்க்கைத் தரத்தை குறைக்கும் ஒ...