About Me

My photo
Vellore, Tamil Nadu , India
Showing posts with label " வருமுன் காப்பது" என்பது தற்காப்பு தான்.. Show all posts
Showing posts with label " வருமுன் காப்பது" என்பது தற்காப்பு தான்.. Show all posts

Friday, August 20, 2021

" வருமுன் காப்பது" என்பது தற்காப்பு தான்.

 நசியம் - தற்காப்பு

சண்டையோ, விளையாட்டோ அதில் தாக்குதல் எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு  தற்காப்பிற்க்கும் இடம் உண்டு.



        " வருமுன் காப்பது" என்பது தற்காப்பு தான். உணவுகளில் சேர்க்கும் வயிற்றை சீராக்கும் சீரகம்(சீர்+அகம்) ஆகட்டும்,பகைவன் வீட்டில் கூட உணவருந்த கூடிய தைரியம் அளிக்கும் மிளகு ஆகட்டும், இல்லை கோவில் விழாக்களில் தெளிக்கும் மஞ்சள் நீராகட்டும், எங்கள் ஊருக்குள் வராதே என சொல்லும் கொடி ஏற்றுதல், காப்பு கட்டுவது என எல்லாமே தற்காப்பை நோக்கியே இருந்தது.

நோய்கள் நம்மை தாக்காமல் இருக்க சித்தர்கள் சொன்ன நோய் அணுகா விதியானது

6 மாதங்களுக்கு ஒருமுறை வாந்திக்கு மருந்தும்,

4 மாதங்களுக்கு ஒருமுறை பேதிக்கு மருந்தும்,

 ஒன்றரை மாதத்திற்கு ஒருமுறை மூக்கில் நசியமும் இட வேண்டும் என்று சொல்கிறது.

மூன்றாவது அலை வரலாம் எனும் நிலையில் கோரோனா பெருந் தொற்றை கட்டுப்படுத்த உலகில் உள்ள மருந்து நிறுவனங்களின் கவனம் இப்போது மூக்கில் இடும் தடுப்பூசிகளை  நோக்கி திரும்பியுள்ளது.இன்னும் அது செயல் வடிவத்திற்கு வரவில்லை.

        கைகளில் இடும் தடுப்பூசியை விட மூக்கின் வழியாக மருந்தை செலுத்தும் போது கொடுக்கப்படும் மருந்து கொஞ்சம் கூட வீணாகாமல் அதன் முழு பலனும் நமக்கு கிடைக்கும்.மூக்கின் வழியாக கொடுப்பது எளிது, மேலும் யார் வேண்டுமானாலும் மூக்கில் சொட்டு மருந்தை இடலாம் இதற்கென தனிப்பயிற்சி எல்லாம் தேவை இல்லை.

        மூக்கின் சளிச்சவ்வின் வழியாக தான் கோரோனா நம் உடலில் உட்புகும். தாக்குதல் நடக்கும் இடத்திலேயே மருந்தை செலுத்தும் போது நோயை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்த முடியும் என்பதால் தான் மூக்கின் வழியாக செலுத்தும் மருந்தின் மேல் இப்போது கவனம் திரும்பி உள்ளது.

     தாக்கும் இடத்தில் தற்காப்பு இருக்கும் இல்லையா? ஆம், மூக்கு சளிசவ்வில் வலுவான தற்காப்பு அமைப்பு இயற்கையாகவே நமக்கு இருக்கிறது.

நோய் எதிர்ப்பு புரதமான Antimicrobial புரதங்கள் (Lactoferrin) மூலம் இந்த தற்காப்பு நமக்கு கிடைக்கிறது.

1.நோய் கிருமி உள்ளே நுழையும் போது அதை தடுத்து அதன் செயல் திறனை குறைத்தல்,

2.நோய் கிருமிகளின் சுவற்றை சேதப்படுத்தல்,

3.நோய் கிருமிகளை சளியில் சிக்க வைத்து பின் cilia மூலம் வெளியேற்றல் ஆகிய செயல்களை மேற்கண்ட புரதங்கள் செய்கின்றன.

        நோய் தாக்குதலின் ஆரம்ப காலத்தில் A வின் செயல் என்பது மிக முக்கியமான ஒன்று. இந்த  A வின் செயலை மேம்படுத்தும் வேலையை தான் மூக்கின் வழியே செலுத்தும்  தடுப்பூசிகள் செய்கின்றன.

        இந்த A மற்றும் நோய் எதிர்ப்பு புரதமான Lactoferrin இரண்டும் தாய் பால், வெள்ளாட்டு பால், பசும் பாலில் அதிகம் உள்ளது.

    நசியமாக இடப்படும் மருந்துகள் பெரும்பாலும் தாய் பாலிலோ இல்லை பசு நெய்யிலோ கலந்து இடப்படும் மருந்துகள் தான் , எனவே ஒவ்வொரு முறை நசியம் இடும் போது நாம் Ig A வையும், Lactoferrin யையும் சேர்த்தே மூக்கில் விடுகிறோம்,இதனால் மூக்கின் சளி சவ்விற்கு இரு மடங்கு சக்தி கிடைக்கிறது.

        சளி சவ்வின் இயல்பு மாறாமல் இருக்க அதில் உள்ள நன்மை செய்யும் கிருமிகளின் அளவு சரியாக இருக்க வேண்டும், இதை தாய்ப்பாலில் உள்ள HMO எனும் Human oligo saccharide செய்கிறது.சளி சவ்வு இயல்பு மாறாமல் இருந்தாலே நோய் கிருமிகள் நுழைவது மிககடினம்.

            எனவே ஒன்றரை மாதத்திற்கு ஒருமுறை நசியமிட்டு தற்காப்புடன் இருப்போம்.

        (தற்காப்பு என்பது நோய் வராமல் தடுக்கும், அதை மீறி வந்தால் நோயின் தீவிரத்தை குறைக்கும்).


இன்னும் அறிவோம்...

அடுத்த பதிவில் வேறொரு மூலிகை பற்றி பார்ப்போம்.

மேலும் மூலிகைகள் மற்றும் சித்த மருந்துகளை பற்றிய உங்களது சந்தேகங்களுக்கும், ஆலோசனைக்கும் தொடர்பு கொள்ளவும்…

இன்னும் அறிவோம்...

இலவச சித்தா, ஆயுர்வேத மருத்துவ ஆலோசனை மற்றும் சந்தேகங்களுக்கு அழைக்கவும்...

பேரன்புடன்….
சுதாகர் G வைத்யா
நாடி பரிசோதனை மற்றும் மருத்துவ ஜோதிட ஆராய்ச்சியாளர்.

பாரம்பரிய மருத்துவத்தில் எங்களின் குறிகோள் உடல் நலம் மற்றும் சுகாதாரத்தை காப்பதே… இங்கு ஆயுர்வேதம், சித்தா, மற்றும் பிற மருத்துவ அறிவியல்களின் ஊடாக நாங்கள் தனிப்பட்ட ஆலோசனைகள், மற்றும் நோய் தீர்க்கும் சிகிச்சைகள், சுகாதாரம் மற்றும் அழகு தொடர்பான சேவைகளை வழங்குகிறோம்.

மேலும் மூலிகைகள் மற்றும் சித்தா, ஆயுர்வேத மருத்துவம் பற்றிய உங்களது சந்தேகங்களுக்கும், ஆலோசனைக்கும் தொடர்பு கொள்ளவும்…
Mayura Ayurvedasram (Vedic Pharmacy)
#40, Old Busstand Commercial Complex,
Vellore - 632 004.  Call : 90430 25336

Mayura Wellness Centre
(Holistic Healing Solutions)
Near Vani Vidyalaya School, 
Katpadi – 632 006.  Call : 90421 35336


#மனம் #ஆயுர்வேதம் #சித்தா #மயூரா #வேலூர்


“மூட்டு அகற்றுவது தீர்வு அல்ல; அதன் இயற்கை இயக்கத்தை மீட்டெடுப்பதே மருத்துவம்.”

மூட்டு வலிக்கு அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வா? உண்மை என்ன சொல்கிறது? ✨ மூட்டு வலி இன்று பலருக்கும் வாழ்க்கைத் தரத்தை குறைக்கும் ஒ...