About Me

My photo
Vellore, Tamil Nadu , India

Sunday, December 28, 2025

“மூட்டு அகற்றுவது தீர்வு அல்ல; அதன் இயற்கை இயக்கத்தை மீட்டெடுப்பதே மருத்துவம்.”

மூட்டு வலிக்கு அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வா?
உண்மை என்ன சொல்கிறது?
✨ மூட்டு வலி இன்று பலருக்கும் வாழ்க்கைத் தரத்தை குறைக்கும் ஒரு பெரும் சவாலாக மாறியுள்ளது.
நடக்க சிரமம், படிகள் ஏற முடியாமை, காலை எழுந்தவுடன் வலி, நீண்ட நேரம் அமர முடியாமை —
இவை அனைத்தும் மூட்டு வலியின் பொதுவான அனுபவங்கள்.
இத்தகைய சூழலில்,
“அறுவை சிகிச்சை (Surgery) தான் ஒரே தீர்வு”
என்று பலருக்கு சொல்லப்படுகிறது.
ஆனால் உண்மையில்,
அது தான் ஒரே வழியா?
மூட்டு வலி – ஒரு நோயா அல்லது ஒரு எச்சரிக்கையா?
பாரம்பரிய மருத்துவ பார்வையில்,
மூட்டு வலி என்பது ஒரு தனி நோயல்ல.

அது, உடலின் உள் சமநிலை குலைந்ததின் அறிகுறி வாதம், கபம், இரத்த ஓட்டம், நரம்புகள் ஆகியவற்றின் பாதிப்பின் வெளிப்பாடு உடல் தன்னை காக்க முயலும்போது,
வலி அதன் மொழியாக வெளிப்படுகிறது. அந்த மொழியை புரிந்து கொள்வதே
உண்மையான சிகிச்சையின் ஆரம்பம்.

🩺 ஆங்கில மருத்துவ அணுகுமுறை – பாரம்பரிய மருத்துவ அணுகுமுறை

⚡ ஆங்கில மருத்துவம்
வலி மற்றும் வீக்கத்தை உடனடியாக கட்டுப்படுத்துதல்
மருந்துகள், ஊசிகள், அறுவை சிகிச்சை (Surgery)
உடனடி நிவாரணம், ஆனால் மீண்டும் வரும் வாய்ப்பு
🌿 பாரம்பரிய மருத்துவம்
நோயின் வேரைக் கண்டறிதல்
உடலின் இயற்கை குணப்படுத்தும் சக்தியை எழுப்புதல்
மெதுவான ஆனால் நீடித்த நலம்

🔍 அறுவை சிகிச்சை (Surgery) ஏன் எப்போதும் முதல் தீர்வாக இருக்கக் கூடாது?
அறுவை சிகிச்சை என்பது,
உடலின் ஒரு பகுதியை மாற்றுவது அல்லது அகற்றுவது.
அது,
ஆரம்ப மற்றும் நடுத்தர நிலையில் உள்ள மூட்டு வலிக்கு
அவசியமில்லை
உடலின் இயற்கை இயக்கத்தை பாதிக்கலாம்
வயதானவர்களுக்கு அபாயம் அதிகமாக இருக்கலாம்
மீண்டும் அறுவை சிகிச்சை தேவைப்படும் வாய்ப்பும் உள்ளது
அதனால் தான்,
அறுவை சிகிச்சை (Surgery)
ஒரு இறுதி கட்ட தீர்வாக மட்டுமே கருதப்பட வேண்டும்.

🌿 “அறுவை சிகிச்சைக்கு முன் ஒரு வாய்ப்பு” – ஏன் முக்கியம்?
மூட்டு வலி ஆரம்ப அல்லது நடுத்தர நிலையில் இருக்கும் போது,
சரியான பாரம்பரிய மருத்துவ ஆலோசனை பெற்றால்,
👉 வலியை குறைக்க முடியும்
👉 மூட்டின் இயக்கத்தை மேம்படுத்த முடியும்
👉 அறுவை சிகிச்சையைத் தவிர்க்கும் வாய்ப்பு உருவாகும்
இந்த “அறுவை சிகிச்சைக்கு முன் ஒரு வாய்ப்பு”
பலரின் வாழ்க்கையை மாற்றியிருக்கிறது.

🌸 இப்போது நாம் என்ன செய்ய வேண்டும்?
மூட்டு வலி வந்தவுடன்,
பயப்பட வேண்டாம்
உடனே அறுவை சிகிச்சைக்கு தயாராக வேண்டாம்
முதலில், ✔ உடலை புரிந்து கொள்ளுங்கள்
✔ அதன் சமநிலையை மதியுங்கள்
✔ இயற்கை சார்ந்த வழிகளை அறிந்துக்கொள்ள
உங்களுக்கு அல்லது உங்கள் குடும்பத்தில் யாருக்காவது மூட்டு வலி இருக்கிறதா?
அறுவை சிகிச்சை (Surgery) குறித்து குழப்பமா?
👉 அறுவை சிகிச்சைக்கு முன் ஒரு வாய்ப்பு
👉 சரியான பாரம்பரிய மருத்துவ ஆலோசனை
இவற்றை அறிந்து கொள்ள,
மயூரா ஆயுர்வேதாஸ்ரமத்தில் முன்பதிவு செய்யுங்கள்.

📍 மயூரா ஆயுர்வேதாஸ்ரம்
📞 அப்பாயிண்ட்மெண்ட் மட்டும் – முன்பதிவு அவசியம் கொள்ளுங்கள்
📞9042135336
✨ மயூரா ஆயுர்வேதாஸ்ரமத்தின் பார்வை
மூட்டு வலி மருந்தால் மட்டும் தீராது.
அறுவை சிகிச்சையும் முதல் தீர்வாக இருக்கக் கூடாது.
உடல் தனது இயற்கை சமநிலையை மீண்டும் பெறும் போது,
நலம் தானாகவே மலரத் தொடங்குகிறது.
அந்த சமநிலையை, இயற்கை மூலிகைகள்,
பாரம்பரிய சிகிச்சை முறைகள்,
உணவு மற்றும் வாழ்க்கை முறை வழிகாட்டுதல்,
மற்றும் தேவையான இடங்களில்
வேத ஜோதிடத்தின் கால வழிகாட்டுதல்
இவற்றின் மூலம் வழங்குவதே
மயூரா ஆயுர்வேதாஸ்ரத்தின் சேவைத் தத்துவம்.

 “மூட்டு அகற்றுவது தீர்வு அல்ல;
அதன் இயற்கை இயக்கத்தை மீட்டெடுப்பதே மருத்துவம்.”

 “இயற்கையோடு இணைந்த மருத்துவமே
நிரந்தர ஆரோக்கியத்தின் அடித்தளம்.”

Monday, December 22, 2025

நவ கிரகங்களும்,நோய்களும்...

நவ கிரகங்களும் நோய்களும்... 
நவகிரகங்களின் கட்டுப்பாட்டில் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களும் இருக்கின்றனர். நவகிரகங்களும் 12 ராசிகள் 27 நட்சத்திரங்களை கட்டுப்படுத்துகின்றன. ராகு கேது தவிர சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய கிரகங்கள் மனித உடம்பின் பாகங்களை கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. எந்த கிரகம் பாதிக்கப்படுகிறதோ அந்த கிரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள உடலின் பாகம் பாதிக்கப்படும். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களும் நவகிரகங்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்றனர். எந்த கிரகம் பாதிக்கப்படுகிறதோ அந்த கிரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள உடலின் பாகம் பாதிக்கப்படும்.
 சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்ரன், சனி, ராகு கேது என நவகிரகங்களால் ஏற்படும் நோய்களையும் குணப்படுத்த செய்யும் பரிகாரங்களையும் பார்க்கலாம்.

ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து ஆறாம் இடம் ருண ரோக சத்ரு ஸ்தானம். ஒருவருக்கு எப்படிப்பட்ட நோய் வரும், அந்த நோய் எளிதில் தீருமா, அல்லது கடனாளி ஆக்கி விடுமா என்று ஆறாமிடத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
நோய் தொற்று பரவும் இன்றைய கால கட்டத்தில் யாரை எந்த நேரத்தில் நோய் தாக்குகிறது என்று சொல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. உடம்பில் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரித்துக்கொண்டால் நோய் வராமல் தடுக்கலாம். நோய் வந்தாலும் எளிதில் குணமடையும். நவகிரகங்களில் எந்த கிரகம் பாதிக்கப்பட்டால் என்ன நோய் வரும் என்று பார்த்து அதற்கேற்ப பரிகாரம் செய்தால் நோய்களில் இருந்தும் தப்பிக்கலாம்.

நோய்களும் கிரகங்களும்...

நோய்களும் கிரகங்களும்
தலை, இருதயம் சூரியனின் கட்டுப்பாட்டிலும், முகம், தொண்டை சந்திரன் கட்டுப்பாட்டிலும், கைகள், தோள்கள் செவ்வாயின் கட்டுப்பாட்டிலும், மார்பு புதன் கட்டுப்பாட்டிலும் உள்ளது. வயிறு, உடல் தோல் பாகம் குருவின் ஆதிக்கத்திலும் அடிவயிறு, பிறப்பு உறுப்பு சுக்கிரன் கட்டுப்பாட்டிலும் உள்ளது. அதே போல தொடை, கால்,பாதம் சனியின் ஆதிக்கத்தின் கீழும் வரும். இராகு, கேதுக்கள் நிழல் கிரகம் என்பதால் மனித உடலில் இடம் கொடுக்கப்படவில்லை.

நோய் எதிர்ப்பு சக்தி
ஜாதகத்தில் 6 ஆம் பாவாதிபதியுடன் எந்த கிரகம் சேர்க்கை பெற்று இருந்தாலும் அந்த கிரகத்திற்குரிய நோய்கள் வரக்கூடும். ஒருவரின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க நவகிரக வழிபாடு அவசியம். முக்கியமாக குரு, சூரியனை வழிபட வேண்டும். உடல் கட்டமைப்பு மற்றும் எலும்பின் காரகர் சனி பகவான் ஆவார். அவர் நல்ல நிலையில் ஜாதகத்தில் இருந்தாலே நோய்கள் எட்டிப்பார்க்காது.

சூரியன்

ஜாதகத்தில் சூரியன் பாதிக்கப்பட்டால் மலச்சிக்கல், அஜீரணம், தூக்கமின்மை, கண் நோய்கள், ரத்த அழுத்தம், இதய நோய், ஆஸ்துமா, வயிற்றில் பூச்சிகள் போன்ற நோய் களையும் ஜுரம் போன்றவை ஏற்படும்.

சந்திரன்

ஜாதகத்தில் சந்திரன் பாதிக்கப்பட்டால் மனநோய்கள், உணர்ச்சி வசப்படுதல், அதிவேக இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம், காச நோய், ரத்த சோகை, சளி, கபம், பாலியல் நோய்கள் இரைப்பைப் புண், நீரிழிவு, குடல் புண் ஏற்படும்.

செவ்வாய்

ஜாதகத்தில் செவ்வாய் பாதிக்கப்பட்டால் மூலநோய், நீரிழிவு, இரைப்பை மற்றும் குடல் நோய்கள், மன அழுத்தம், தோல் வியாதிகள், இதய நோய், நரம்புத் தளர்ச்சி, அம்மை, விபத்து மற்றும் ஆயுதங்களால் பாதிக்கப்படும்.


புதன்

ஜாதகத்தில் புதன் பாதிக்கப்பட்டிருந்தால் இதய நோய்கள், ரத்த அழுத்தம், வயிற்றுப்புண், புற்றுநோய், தோல் நோய்கள், நரம்பு தளர்ச்சி, இரைப்பை புண் ஏற்படும்.

குரு

ஜாதகத்தில் குரு பாதிக்கப்பட்டால் தொண்டை சம்பந்தமான நோய்கள், தைராய்டு, அம்மை, முடக்கு வாதம், காமாலை, நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகள், பக்க வாதம், கீழ் வாதம், நீரிழிவு நோய் ஏற்படும்.

சுக்கிரன்

ஜாதகத்தில் சுக்கிரன் பாதிக்கப்பட்டால் கண், காது, மூக்கு நோய்கள். நுரையீரல் நோய், இருமல், குடல்புண், இருதய நோய், ரத்த அழுத்தம், பாலியல் தொடர்பான நோய்கள் ஏற்படும்.

சனி

ஜாதகத்தில் சனி பாதிக்கப்பட்டால் மனநோய், கை கால் வலிப்பு, மூளை பாதிப்பு, தோல் நோய், நீண்ட கால வியாதிகள், சிறுநீரக நோய், பித்தம், குடல் நோய், விபத்தால் பாதிக்கப்படும்.

ராகு - கேது

ராகு பாதிக்கப்பட்டால் அதிக அமிலம் சுரத்தல், வயிறு கோளாறுகள், அஜீரணம், தூக்கமின்மை, மூளை நோய், குடல் புண், தோல் வியாதிகள் ஏற்படும். அது போல கேது பாதிக்கப்பட்டால் புற்றுநோய், வாதம், தோல் நோய்கள், காலரா, நரம்புத் தளர்ச்சி, சிறுநீரகக் கோளாறு ஏற்படும்.


நவ கிரக வழிபாடு :

நோய்களில் இருந்து தப்பிக்க குரு, சூரியன் சந்திரன் இவர்களை வழிபடுவது சிறந்த பலனளிக்கும்.
 தேவ மருத்துவரான தன்வந்திரி வழிபாடு மிகச்சிறந்த நோய் எதிர்ப்பாற்றலை ஏற்படுத்தும். புதன் மற்றும் வியாழன் கிழமைகளில் தன்வந்திரி வழிபாடு செய்யலாம்.


குல தெய்வ வழிபாடு:

உடம்பில் நோய் பாதிப்பு குறைந்து நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்க குல தெய்வ வழிபாடு அவசியம். குல தெய்வ கோவிலுக்கு சென்று வழிபட்டு வருவது சிறந்த நோய் எதிர்ப்பாற்றலை ஏற்படுத்தும். அமாவாசை நாட்களில் பித்ரு வழிபாடு எனும் முன்னோருக்கு செய்யும் திதிகளை சரியாக செய்தாலே நோய்கள் பாதிப்பு ஏற்படாது. தினசரியும் சூரிய நமஸ்காரம் செய்வது சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை தரும்.

தீராத நோய் தீர்க்கும் பரிகாரம்
செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமை அன்று அம்மன் கோவிலுக்கு சென்று கொடி மரத்தின் முன்பாக உங்கள் கையாலேயே கல் உப்பை கொட்டி வர, உங்களது உடலில் இருக்கும் நோய் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. வாரம் தோறும் வரும் வெள்ளிக்கிழமை அன்றும் செவ்வாய்க் கிழமை அன்றும் அம்மனுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வைத்துவிட்டு, உங்கள் கையால் உப்பைக் கொட்டி வந்தால் நிச்சயம் உங்களுடைய ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தெரியும். மருத்துவ சிகிச்சை தொடர்ந்து செய்ய நோய்கள் எளிதில் குணமடையும்.

பழனி முருகன் சந்தனம்: 

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக போற்றப்படும் பழனிக்கு சென்று முருகப்பெருமானை காலை 4.00 மணி அளவில் பிரம்ம முகூர்த்தத்தில் தரிசனம் செய்ய வேண்டும். அந்த சமயத்தில், கோவிலுக்கு வருகை தரக்கூடிய பக்தர்களுக்கு சந்தனத்தை பிரசாதமாக கொடுப்பார்கள். இந்த சந்தனத்தை எடுத்து நெற்றியில் இட்டுக் கொள்ளலாம். அதில் இருந்து ஒரு சொட்டு சந்தனத்தை எடுத்து தண்ணீரில் கலந்து பருக நோய்கள் நீங்கும். 
பழனி முருகனின் சிலையில் இருந்து சந்தனம் மொத்தமாக தான் எடுத்து பக்தர்களுக்கு வினியோகம் செய்யப்படும். முருகனின் தொப்புள் பகுதியில் இருக்கக்கூடிய சந்தனம் எவருக்கு கிடைக்கின்றதோ அவர்கள் அதிர்ஷ்டசாலிகள். நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்பவர்களுக்கு சரும நோய்களும், உடல் நலக்கோளாறுகளும் எளிதில் நீங்கும்.

இன்னும் அறிவோம்...

சித்தா, ஆயுர்வேத மருத்துவ ஆலோசனை மற்றும் சந்தேகங்களுக்கு அழைக்கவும்...

பேரன்புடன்….
சுதாகர் G வைத்யா
நாடி பரிசோதனை மற்றும் மருத்துவ ஜோதிட ஆராய்ச்சியாளர்.

பாரம்பரிய மருத்துவத்தில் எங்களின் குறிகோள் உடல் நலம் மற்றும் சுகாதாரத்தை காப்பதே… இங்கு ஆயுர்வேதம், சித்தா, மற்றும் பிற மருத்துவ ஜோதிட அறிவியலின் ஊடாக நாங்கள் தனிப்பட்ட ஆலோசனைகள், மற்றும் நோய் தீர்க்கும் சிகிச்சைகள், சுகாதாரம் மற்றும் அழகு தொடர்பான சேவைகளை வழங்குகிறோம்.

மேலும் மூலிகைகள் மற்றும் சித்தா, ஆயுர்வேத மருத்துவம் பற்றிய உங்களது சந்தேகங்களுக்கும், ஆலோசனைக்கும் தொடர்பு கொள்ளவும்…
Mayura Vedic Pharmacy
#40, Old Busstand Commercial Complex,
Vellore - 632 004.  Call : 90430 25336

Mayura Vaidya Salai
(Holistic Healing Solutions)
Near Silkmill Bus stop, 
Katpadi – 632 006.  Call : 90421 35336


#அக்கறை #உடலும் #உயிரும் #மனம் #மயூரா #ஆயுர்வேதம் #சித்தா #நாடிபரிசோதனை #மருத்துவஜோதிடம் #வேலூர்

https://mayuraayur.com/pages/appointment




 

Tuesday, December 9, 2025

"ஏழு நிமிடத்தில் மறைந்த தலைவலி" -மஹாசிரசு (Mahasirs Mudra) முத்திரை தியானம்... உடல்–மனம்–உயிர் சமநிலையை சீரமைக்கும் சக்திவாய்ந்த இயற்கை மருத்துவம்.


"ஏழு நிமிடத்தில் மறைந்த தலைவலி"  -முத்திரை சிகிச்சை

 

முத்திரை தியானத்தின் அற்புத சக்தியை கண்டறிந்த தருணம்

மயூரா ஆயுர்வேதாஸ்ரமத்தில் சமீபத்தில் ஒரு நோயாளர் வந்தார்.
பல ஆண்டுகளாக தீராத ஒற்றைத் தலைவலி (Migraine)
பல மருத்துவர்களை அணுகியும், பல வகை சிகிச்சைகளை எடுத்தும்—
தற்காலிக நிவாரணம் தவிர எந்த மாற்றமும் இல்லை.

அவரின் நிலை மிகக் கடினமாக இருந்தது;
👉 தலை வெடிக்கும் போல வலி
👉 குமட்டல், வாந்தி வரும் உணர்வு
👉 ஒளி மற்றும் சத்தத்திற்கு மிகுந்த எரிச்சல்

நோயாளியின் உடல் நிலையைப் பார்த்தபோது,
நாம் வழங்கும் பாரம்பரிய முத்திரை தியான சிகிச்சை அவருக்கு சிறந்ததாக இருக்கும் என்று உணர்ந்தேன்.

நான் அவரிடம் சொன்னேன்:

“ஏழு நிமிடங்கள் அமைதியாக அமர்ந்து இந்த முத்திரையைப் போடுங்கள்.
ஆழ்ந்து மூச்சை இழுத்து நிதானமாக விடுங்கள்
.”

🕉 மஹாசிரசு முத்திரை முறை

  • இரு கைகளின் மோதிர விரல்களை உள்ளங்கையின் நடுவில் மடக்கி வைக்கவும்
  • சுண்டுவிரல் மட்டும் நேராக உயர்த்தி வைத்துக் கொள்ளவும்
  • மற்ற மூன்று விரல்களையும் இணைக்கவும்
  • முதுகு நேராக
  • கைகளை தோள்மீது மெதுவாக வைத்து அமரவும்

அவர் ஏழு நிமிடங்கள் முத்திரையை செய்தார்.
முடிவில் கண் திறந்தபோது அதிர்ச்சி கலந்த சந்தோஷத்துடன்,

“எனக்கு எழுபது சதவீதம் வலி குறைந்துவிட்டது!” என்று கூறினார்.
குமட்டல் முழுமையாக மறைந்து இருந்தது.

அன்று மாலை மீண்டும் வந்தபோது அவர் சொன்ன வார்த்தைகள்—

“சார்… மனமே லேசாகிவிட்டது.
இது போன்ற முத்திரைகளை நான் தினமும் செய்யப் போகிறேன்.
நான் பல வருடங்களாக தேடிய நிவாரணம் இப்போது தான் கிடைத்தது.”

இந்தச் சிறிய முத்திரை,
உடலின் உயிர் நுட்ப நரம்புகளையும் பிராண ஓட்டத்தையும் சீரமைக்கிறது.
மிகக் குறைந்த நேரத்தில் கிடைக்கும் மிகப் பெரிய நிவாரணம்.


🌾 மயூரா ஆயுர்வேதாஸ்ரமத்தில் – முத்திரை தியான சிகிச்சை

ஒவ்வொரு நோயுக்கும் தனிப்பட்ட முத்திரைகள் வழங்கப்படுகின்றன:

✔ தலைவலி / மைக்ரேன்
✔ நரம்பு பலவீனம்
✔ மனஅழுத்தம் – Anxiety
✔ மூச்சு பிரச்சினைகள்
✔ தூக்கமின்மை
✔ ஜீரண கோளாறுகள்
✔ தோஷ சமநிலை பிரச்சனைகள் (Vata–Pitta–Kapha)

இந்த முத்திரை தியானங்கள்,
உடல்–மனம்–உயிர் சமநிலையை சீரமைக்கும் சக்திவாய்ந்த இயற்கை மருத்துவம்.


📍 Mayura Ayurvedasram

Vaidya Salai, Katpadi
📞 90421 35336

Vedic Pharmacy, Vellore
📞 90430 25336


✒️ சுதாகர் G வைத்யா
Traditional Healer | Nadi Pariksha | Medical Astrology | Mudra Therapy | Ayurvedic System



Tuesday, October 14, 2025

பெண்களை பாதிக்கும் மூட்டு வலி காரணமும், தீர்வும்...

நம்மை முடக்கும் மூட்டுவலி...

உடலின் எடையைத் தாங்கக்கூடியதே  மூட்டுகள்தான். மூட்டுகள் என்பது தனி உறுப்பல்ல. அது  எலும்புகள், தசைநார்கள், குருத்தெலும்புகள், தசை நாண்கள் முதலானவற்றை உள்ளடக்கியது.  இவற்றை நம் உடலோடு சேர்த்து உறுதியாக  பிடித்துக்கொள்ள கொலாஜன் என்னும் புரதம் உண்டு.  இந்த கொலாஜன் உற்பத்தியில் குறையில்லாமல் இருக்கும் வரை மூட்டுவலி என்பதோ பிரச்சினை என்பதோ நமக்கு வரவே வராது.

          எலும்புகள் இணையும் கைமூட்டு, கால் மூட்டு, தோள் பட்டை மூட்டு, கை மணிக்கட்டு, இடுப்பு மூட்டு, கால்பாத மூட்டு இவை ஆறும் முக்கியமான மூட்டுகள். தற்போது கழுத்து, இடுப்பு, முதுகுத் தண்டு வடத்திலும் தீவிரமான வலியை  அனுபவிக்கிறோம்.. நடக்கவும் படிகளில் ஏறவும் அச்சப்பட்டு ஒரேஇடத்தில் முடங்குபவர்களைப் பார்க்கிறோம்.

மூட்டுவலி அறிகுறிகள் :

        மூட்டுகளில் ஏற்படும் அசெளகரியமான  உணர்வு, அதிக வீக்கம், வலி, எப்போதும் ஒரு உஷ்ணம், நடக்கும்போதோ படிகளில் ஏறும்போதோ  எலும்பில் இருந்து ஒருவித  சத்தங்களைக் கேட்பது அல்லது உணர்வது,   கைகால்களை  நீட்டி மடக்கி உட்காரும்போது ஜிவ்வென்று ஏற்படும் வலி,  சம்மணமிட்டு அமருவதில் சிரமம், நடப்பதில் சிரமம்,  நீண்ட நேரம் நிற்கும் போது ஏற்படும் கால்வலி, மூட்டுகளில் இறுக்கம், கால்களை அசைக்க முடியாமை, வளைந்த கால்கள் இவையெல்லாம் மூட்டுவலிகளின் அடுத்தடுத்த கட்டம்!


        அதேநேரம் மூட்டுவலிக்கான சிகிச்சை என்பது வலியை முற்றிலும் நீக்காமல் வலியின் தீவிரத்தைக் குறைக்க மட்டுமே செய்யும் என்பதால் ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை செய்யாட்டால் தீவிரமான வலியை உண்டாக்கி  ஒரே இடத்தில் முடக்கிவிடும் என்று எச்சரிக்கிறார்கள்.

மூட்டுவலி ஏன் உண்டாகிறது?

        உடலுக்குத் தேவையான கால்சியம் சத்துக்கள் போதிய அளவில் இல்லாமல் இருக்கும்போது எலும்புகள் வலுவிழக்கின்றன. தற்போது குழந்தைகளையும் விட்டுவைக்காத எலும்பு சம்பந்தமான குறைபாடுகளுக்கு காரணம் அம்மாக்கள் தான்.  கர்ப்பகாலத்தில் கால்சியச் சத்துகொண்ட உணவுகள் குழந்தைகளின் எலும்பை வலுவாக்கும். இப்படியான சத்து குறைபாடு ஆகும் போது குழந்தைகளின் எலும்பு மென்மையாக  இருக்கிறது..  உடலை  தூண் போல் தாங்கும் ஆதாரமே எலும்புதான் என்பதால் வலுவிழந்த எலும்பைக் கொண்டு பிறக்கும் குழந்தைகள்  வருங்காலத்தில்  எலும்பு சம்பந்தமான பாதிப்புகள் உண்டாகும்போது மிக மோசமாக பாதிக்கப்படுகிறார்கள்ஹார்மோன் குறைபாடுகள், கட்டுப்பாடில்லாமல் இருக்கும் நீரிழிவு நோய், மரபு, உடல் உழைப்பின்மை இவையெல்லாம் மூட்டுவலி ஏற்பட காரணங்களாகின்றன.

        மருத்துவ ரீதியாக மூட்டுவலிக்கு முக்கிய காரணமாக ஆஸ்டியோ ஆர்த்ரைட்டீஸ், ருமட்டாய்டு ஆர்த்ரைட்டீஸ், கெள்ட் ஆர்த்ரைட்டீஸ் சொல்லலாம். 75% மூட்டுவலிக்கு காரணம் ஆஸ்டியோ ஆர்த்ரைட்டீஸ்தான். மூட்டுகளில் உள்ள கொலாஜன் எனும் புரதத்தின் அளவு, வயதாகும் போது இயற்கையாகவே குறையும் என்பதால்தான் கால்சியம் அதிகமுள்ள உணவுகளை நம் முன்னோர்கள் எடுத்துக்கொண்டார்கள். உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி, நம் மூட்டுகளையும் பதம் பார்ப்பதால் இந்த ருமட்டாய்டு பாதிப்பு உண்டாகிறது.  காலையில் குறைந்தது ஒரு மணி நேரமாவது கை, கால்களை அசைக்கமுடியாது.. இது பரம்பரை நோயாகவும் சொல்லப்படுகிறது. ரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகரிக்கும்போது கெளட் ஆர்த்ரைட்டீஸ் உண்டாகும். எலும்பில் நோய்த்தொற்று இருந்தாலும் மூட்டுவலி உண்டாகும் என்கிறார்கள் மருத்துவர்கள்.


      பெண்கள் மாதவிடாய் காலங்களில் கால்சியம் சத்தை அதிகமாகவே இழக்கிறார்கள் என்கின்றன மருத்துவ ஆய்வுகள்.  பிரசவ காலங்களில் இதன் இழப்பு  மேலும் அதிகரிக்கிறது. அதனால்தான் ஆண்களை விட பெண்கள் ஆர்த்ட்ரைட்டீஸ் பிரச்னைகளை அதிகம் சந்திக்கிறார்கள் என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

மூட்டுவலியைக் குறைக்க என்ன செய்யலாம் :

மூட்டுவலி லேசாக மினுக்கிடத் தொடங்கும்போதே உணர்ந்துகொண்டால் ஆரம்ப சிகிச்சையோடு நம் வாழ்க்கை முறையையும் மாற்றி அமைத்து இந்தப் பாதிப்பிலிருந்து நிச்ச யம் மீளலாம்.

முதலில் உடல் எடையைச் சீரான அளவில் வைத்திருக்க வேண்டும்.

வைட்டமின் டி அதிகம் கிடைக்கக்கூடிய சூரிய ஒளியை உடலில் நேரடியாக படும்படி இருப்பது அவசியம்.

கிழங்குவகைகளைத் தவிர்த்து பச்சைக்காய்கறிகள், கீரைகள், பழங்கள் முதலானவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். கால்சியம் அதிகமுள்ள பால் சார்ந்த உணவு வகைகள், முருங்கைக் கீரை வாரம் 4 நாட்களாவது எடுத்துக் கொள்ளுங்கள்.

இயன்றவரை நடைபயிற்சி, நாற்காலியில் அமராமல் கீழே பாய்விரித்து சம்மணமிட்டு அமர்வது நல்லது.

தீவிர மூட்டுவலி இல்லாத பட்சத்தில் வெஸ்டர்ன் டாய்லெட் தவிர்த்து இந்திய கழிவறைகளைப் பயன்படுத்துவது நல்லது.


மூட்டுவலி தீவிரமாக இருக்கும்போது ஓய்வு  எடுத்துக்கொள்வதோடு அவை குறையும் நேரத்தில்  நடைபயிற்சி மேற்கொள்ளலாம்.

 மன அழுத்தத்தாலும் மூட்டுவலி தீவிரமாகும் என்பதால் மனதை அமைதிப் படுத்த எளிய யோகாசனங்கள் மேற்கொள்ளலாம்.

கால்மூட்டுகளில் வலி இருப்பவர்கள் உறங்கும்போது  ஒருக்களித்து படுத்து வலி இருக்கும் கால்களுக்கு தலையணை வைத்துக்கொள்ளலாம்.

பிரண்டையில் இருக்கும் அதிகப்படியான கால்சியம் மூட்டு வலியை அண்டவிடாமல் செய்துவிடும். பிரண்டைத் துவையல், பிரண்டைப் பொடி என்று உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.  வலி ஏற்படும்போது பிரண்டையுடன் கல்உப்பு சேர்த்து அம்மியில் வைத்து அரைத்து, இரும்பு வாணலியில் லேசாக வதக்கி  சூடு தாங்கும் அளவில் வலி இருக்கும் இடத்தில் வைத்து கட்டுவார்கள்.


            வாரந்தோறும் எண்ணெய்க் குளியலின் போது நல்லெண்ணெயை சூடுபடுத்தி  மூட்டுகளில் அதிகப்படியாக தேய்த்து மசாஜ் செய்வார்கள். சரும துவாரங்கள் வழியாக எலும்பு மூட்டுகளை இணைக்கும் கொலாஜன் புரதத்தை இது அதிகரிப்பதோடு மூட்டு வாத நோய்களை வரவிடாமல் செய்யும்.

முடக்காமல் இருக்கச் செய்யும் முடக்கத்தான் கீரை  என்று சொன்ன முன்னோர்கள், இந்தக் கீரையை தோசையாக, குழம்பாக, பொடியாக, துவையலாக  வாரம் ஒருமுறையாவது சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.

இப்போது போல் யோகா, உடற்பயிற்சி எல்லாம் அப்போது கிடையாது. ஆனாலும் உடல் எடையைக் கட்டுக்கோப்பாக வைத்து உடல் உழைப்பில் குறையில்லாமல் இருந்தார்கள்.  குறிப்பாக எங்கு போனாலும் நடராஜா சர்வீஸ்தான். அதாவது நடந்தேதான் செல்வார்கள். 

கொஞ்சம் நடப்போம். மூட்டுக்கு வலு சேர்க்கும் உணவுகளைச் சேர்ப்போம். வலியை வரவிடாமல் செய்வோம்!

அடுத்த பதிவில் வேறொரு சித்த மருத்துவ சிகிச்சையை  பற்றி பார்ப்போம்.

மேலும் மூலிகைகள் மற்றும் சித்த மருந்துகளை பற்றிய உங்களது சந்தேகங்களுக்கும், ஆலோசனைக்கும் தொடர்பு கொள்ளவும்…

நன்றி 



The Miracle of Meditation — The Path to a Steady Mind

The Miracle of Meditation — The Path to a Steady Mind
(By Sudhakar G Vaidya, Founder of Mayura Ayurvedasram)

The mind is a vast ocean, constantly stirred by waves of thoughts, emotions, and desires. When the waves are restless, clarity and peace disappear. But when the waves settle, truth reflects like the calm surface of a lake.
The art that brings this stillness — that awakens inner silence and wisdom — is Meditation.

At Mayura Ayurvedasram, meditation is not seen merely as a practice, but as a living medicine for the mind and soul. Just as Ayurvedic herbs cleanse the body, meditation purifies the inner being — removing the toxins of worry, fear, and confusion.

Meditation is not about controlling the mind; it is about understanding it. When we observe our thoughts without judgment, they begin to lose their grip. Slowly, the mind becomes calm, radiant, and filled with energy. Awareness deepens, and the boundaries between “self” and “world” begin to fade — this is where true healing begins.

According to Sudhakar G Vaidya, meditation is the highest form of Aushadha (medicine). Where herbs heal the physical body, meditation restores Prana — the life force that connects body, mind, and spirit. Through daily practice, one discovers that silence itself can heal, bringing balance to the three doshas (Vata, Pitta, and Kapha) and harmony to every cell.

A steady mind is not achieved by escaping life but by being fully present in every moment — to breathe, to feel, to simply be. When awareness blossoms, life itself becomes sacred. Every act becomes worship, and every breath becomes prayer.

Meditation does not demand effort; it demands sincerity. Even a few moments of true awareness can transform anxiety into peace, restlessness into joy, and confusion into clarity. The miracle is not outside — it unfolds within, quietly, like the sunrise that awakens a new dawn.
“In silence, the soul blooms.
In awareness, the heart finds peace.
And in meditation, life becomes divine.”

🌿 At Mayura Ayurvedasram, meditation is not taught as a technique — it is shared as an experience of wholeness, where the healer and the healed become one in awareness. 🌿

“மூட்டு அகற்றுவது தீர்வு அல்ல; அதன் இயற்கை இயக்கத்தை மீட்டெடுப்பதே மருத்துவம்.”

மூட்டு வலிக்கு அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வா? உண்மை என்ன சொல்கிறது? ✨ மூட்டு வலி இன்று பலருக்கும் வாழ்க்கைத் தரத்தை குறைக்கும் ஒ...