About Me

My photo
Vellore, Tamil Nadu , India

Tuesday, June 25, 2024

நாடி... அதை நாடி...

ஜோதிடம், நாடி ஜோதிடம் பற்றிய பதிவுகளில் வரும் கமெண்டுகளை ஆராய்ந்தால் பொதுவாக இரண்டே இரண்டு  வகை தான்.
ஜோதிடம், நாடி ஜோதிடத்தில் சொன்னது எல்லாம் என் வாழ்க்கையில் நடந்தது. என் வாழ்க்கையையே திசை திருப்பியது. எனக்கு முழு நம்பிக்கை உண்டு. ஆனால் சரியான ஜோதிடர்களைஅணுக வேண்டும்.

இதெல்லாம் ஹம்பக். காசு பறிக்கும் வித்தை. எதுவுமே எனக்கு நடக்கவில்லை. மனம் பலகீனமானவர்கள் பிரச்னையை கையாள தெரியாமல் போகும் புகலிடம் என்ற கடுமையான வாதம்.

அவரவர் அனுபவத்தால் வந்த 
சிந்தனை துளிகள் இவைகள்
என எடுத்து கொள்ளலாம்.

எதற்கு ஜோதிடம், நாடி ஜோதிடத்தை 
நாடி போகிறோம்?
1) என்ன முயன்றும் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கவில்லை. ஏதாவது வழி கிடைக்காதா ? என்று நாடுவோர்.

2) என்னதான் சொல்கிறார்கள் பார்ப்போமே என்ற ஆர்வம் மிகுந்தவர்கள்.

3) பயம், மரணபயம் உடையோர்., பிரச்னையின் அழுத்தத்தால் சுயமாக சிந்திக்க முடியாமல், மற்றவர் உதவியை நாடுவோர்.
இதற்கு மேல் இருப்பதாக தெரியவில்லை.

எல்லோரிடமும் பொதுவாக  இருப்பது, என்னால் முடியவில்லை, உதவி தேவை.

ஜோதிடம், நாடி ஜோதிடத்தில் கிரக பலன்கள், இதுவரை  நடந்த நிகழ்வுகளை கூறி, இனி இப்படி பரிகாரம், ஸ்தல யாத்திரை சென்றால் உங்கள் பிரச்னைகள் தீர வாய்ப்புண்டு என்று நலிந்த மனதிற்கு ஆறுதல் கூறி, நம்பிக்கை ஊட்டுகிறார்கள்.

இந்த மன நம்பிக்கையை பெற அங்கே ஏன் போய், காசை செலவழித்து, தேவையற்ற விஷயங்களையும் உள்வாங்குவானேன்?
சுயமாக சிந்தித்து, நம் நலம் நாடுவோரிடம் கலந்து ஆலோசித்து ஒரு தீர்வு காணலாமே. பொதுவாக ஜோதிடம், நாடி ஜோதிடம் எல்லாம் பணம் பறிக்கும் கும்பலின் ஆளுமை என்று ஒரு சாரார் வாதம்.

அவரவர் செய்த வினைகளை அவரவர் அனுபவித்துத்தான் ஆக வேண்டும். செயல் விளைவு தத்துவம். பரிகாரம் எல்லாம் வெறும் மனதிருப்திக்கு மட்டுமே.நல்ல எண்ணங்களால் நற்செயல்களால், தீய வினைபதிவுகள் கழிந்தால் மட்டுமே நன்மை மலர ஆரம்பிக்கும் என்பது தியானம் போன்றவற்றில் ஈடுபாடு கொண்டவர்களின் வாதம்.
நுட்பமான சக்தி ஒன்று அனைத்தையும் சமநிலையில் வைத்திருக்கிறது.
அதனை உணருங்கள்.....
அதனை கிரகியுங்கள்.....
அதனிடம் திறந்திருங்கள்.....

ஆனால் ஒரு விஷயம் உறுதி:

விஷயங்கள் அனைத்தும் கவனிக்கப்படுகின்றன.

பிறகு எதற்கு இந்த பொறுமையின்மை,
எதற்காக இந்த திட்டமிடுதல்?
பிறகு எதற்காக இந்த பரபரப்பு?
பிறகு எதற்காக இந்த வருத்தம்?

பொறுமையாக இருங்கள்.....

காத்திருங்கள்....
நம்புங்கள்......
உணருங்கள்....

பார்வைக்கு புலப்படாத கரங்கள் 
எப்போதும் உங்களை சுற்றிலும் வியாபித்திருக்கின்றன....
அவரவர் சிந்தனை அவரவர்க்கு.

தீர ஆராய்ந்து சரியான முடிவை 
எடுப்பது அவரவர் தரத்திற்கேற்ப,
அவரவர் எண்ணங்களே.

இன்னும் அறிவோம்...

இலவச சித்தா, ஆயுர்வேத மருத்துவ ஆலோசனை மற்றும் சந்தேகங்களுக்கு அழைக்கவும்...

பேரன்புடன்….
சுதாகர் G வைத்யா
நாடி பரிசோதனை மற்றும் மருத்துவ ஜோதிட ஆராய்ச்சியாளர்.

பாரம்பரிய மருத்துவத்தில் எங்களின் குறிகோள் உடல் நலம் மற்றும் சுகாதாரத்தை காப்பதே… இங்கு ஆயுர்வேதம், சித்தா, மற்றும் பிற மருத்துவ ஜோதிட அறிவியல்களின் ஊடாக நாங்கள் தனிப்பட்ட ஆலோசனைகள், மற்றும் நோய் தீர்க்கும் சிகிச்சைகள், சுகாதாரம் மற்றும் அழகு தொடர்பான சேவைகளை வழங்குகிறோம்.

மேலும் மூலிகைகள் மற்றும் சித்தா, ஆயுர்வேத மருத்துவம் பற்றிய உங்களது சந்தேகங்களுக்கும், ஆலோசனைக்கும் தொடர்பு கொள்ளவும்…

Mayura Vedic Pharmacy
#40, Old Busstand Commercial Complex,
Vellore - 632 004.  Call : 90430 25336

Mayura Vaidya Salai
(Holistic Healing Solutions)
Near Vani Vidyalaya School, 
Katpadi – 632 006.  Call : 90421 35336


#அக்கறை #உடலும் #உயிரும் #மனம் #மயூரா #ஆயுர்வேதம் #சித்தா #நாடிபரிசோதனை #மருத்துவஜோதிடம் #வேலூர்

No comments:

Post a Comment

“மூட்டு அகற்றுவது தீர்வு அல்ல; அதன் இயற்கை இயக்கத்தை மீட்டெடுப்பதே மருத்துவம்.”

மூட்டு வலிக்கு அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வா? உண்மை என்ன சொல்கிறது? ✨ மூட்டு வலி இன்று பலருக்கும் வாழ்க்கைத் தரத்தை குறைக்கும் ஒ...