ஹரி ஓம்...
தற்கால மனிதனின் அவசரம், நேரமின்மை என்ற எண்ணம், உண்ணும் உணவில் கவனமின்மை, எப்படியாவது சம்பாதிக்க வேண்டும் என்கிற உணவு தயாரிப்பாளரின் பேராசை போன்றவை, மனிதனுக்குள் பலவித நோய்களை வளர்க்கிறது.
பெரியவர்கள், முன்னோர்கள், சித்தர்கள் சொன்ன வாழ்க்கை முறையை உதறி தள்ளிவிட்டு, சற்றும் நன்னடத்தை இல்லா வாழ்க்கை வாழும்போது உடல் உள்உறுப்புகள் செயல்படுவது பாதிக்கப்பட்டு பலவித நோய்களை உருவாக்குகிறது. ரத்தத்தில் "கிரியாடினின்" என்கிற ஒரு பொருள் அதிகமாக இருந்தால், சிறுநீரகம் பாதிக்கப்படுகிறது என்று அர்த்தம்.
"கிரியாடினின்" என்பது குடல் அழற்சியினால் உற்பத்தி செய்யப்படுகிற ஒரு வகை திரவம். இதன் அளவு ஒருவரின் ரத்தத்தில் 0.5 - 1.20 mg அளவு இருந்தால் சிறுநீரகம் சரியாக செயல் படுகிறது என்று அர்த்தம். 1.20 க்கு மேல் கிரியாடினின் ரத்தத்தில் இருந்தால், சிறுநீரகம் செயல்பாடு பாதிக்கப்பட்டிருக்கிறது என மருத்துவர்கள் கூறுவார்கள். இதன் அளவு 3 அல்லது 4 என்கிற அளவை தாண்டும் பொழுது "டயாலிசிஸ்" (ரத்த சுத்தி) செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள்.
அதிக ப்ரோடீன், செயற்கை எண்ணெய்கள், உணவில் சேர்க்க கூடாத ரசாயனங்கள், கண்டதை எல்லாம், கண்டவனிடம் வாங்கி உண்கிற பழக்கம் போன்றவை, இக்காலத்தில் 20 வயது வந்தவர்களுக்கே சிறுநீரகம் செயலிழக்க காரணமாகிறது. உணவில் கட்டுப்பாடு இருந்தால், இதன் அளவை ஓரளவுக்கு குறைத்து விடலாம்.
இயற்கை மருத்துவத்தில் (சித்த மருத்துவம்) இந்த குறையை நிவர்த்தி செய்ய என்ன கூறப்பட்டுள்ளது என்று தேடிய பொழுது, நம் வீட்டில் சமையல் அறையில் இருக்கும் "பார்லி" விதைகள் "கிரியாடினின்" அளவை குறைக்க உதவும் என்று தெரிந்தது.
மூன்று ஸ்பூன் பார்லியை, ஒரு டம்ளர் நீரில் இரவு படுக்க போகும்போது எடுத்து வைத்து, அதிகாலை 5 மணிக்கு எழுந்து வெறும் வயிற்றில் அதை வடிகட்டி, நீரை மட்டும் பருகிவர, ஒரு வாரத்தில் "கிரியாடினின்" அளவு நன்றாக குறையும். ஒரு மாதத்தில் "கிரியாடினின்" கட்டுப்பாட்டுக்குள் வந்து உடல் இயல்பு நிலைக்கு வந்துவிடும். நன்றாக ஊறிய பார்லியை சாதம் வடிக்கும் பொழுது அதனுடன் கலந்து உண்ணலாம்.
"கிரியாடினின்" அளவு 1.70 இருந்த ஒருவருக்கு இதை கொடுக்க, மூன்று வாரங்களில் "கிரியாடினின்" அளவு 1.28 ஆக குறைந்தது. இந்த முறையை தொடரும் பொழுது உணவில் "காரம்" நிறைய அளவுக்கு குறைத்துக் கொள்ளவும்.
பின்விளைவு:- இதை எடுத்துக் கொள்ள தொடங்கினால், மிகுந்த பசி வரும். ரத்தத்தில் "கிரியாடினின்" அளவை சுத்தம் பண்ணி, குடலை அழற்சியில் நின்று காப்பாற்றி, சிறுநீரகத்தை இயல்பாக செயல்பட வைக்கும்.
இயற்கையாக நலம் பெறுக!
இன்னும் அறிவோம்...!
இலவச சித்தா, ஆயுர்வேத மருத்துவ ஆலோசனை மற்றும் சந்தேகங்களுக்கு அழைக்கவும்...
பேரன்புடன்….
சுதாகர் G வைத்யா
நாடி பரிசோதனை மற்றும் மருத்துவ ஜோதிட ஆராய்ச்சியாளர்.
பாரம்பரிய மருத்துவத்தில் எங்களின் குறிகோள் உடல் நலம் மற்றும் சுகாதாரத்தை காப்பதே… இங்கு ஆயுர்வேதம், சித்தா, மற்றும் பிற மருத்துவ அறிவியல்களின் ஊடாக நாங்கள் தனிப்பட்ட ஆலோசனைகள், மற்றும் நோய் தீர்க்கும் சிகிச்சைகள், சுகாதாரம் மற்றும் அழகு தொடர்பான சேவைகளை வழங்குகிறோம்.
மேலும் மூலிகைகள் மற்றும் சித்தா, ஆயுர்வேத மருத்துவம் பற்றிய உங்களது சந்தேகங்களுக்கும், ஆலோசனைக்கும் தொடர்பு கொள்ளவும்…
Mayura Vedic Pharmacy
#40, Old Busstand Commercial Complex,
Vellore - 632 004. Call : 90430 25336
Mayura Vaidya Salai
(Holistic Healing Solutions)
Near Vani Vidyalaya School,
Katpadi – 632 006. Call : 90421 35336
#மனம் #ஆயுர்வேதம் #சித்தா #மயூரா #வேலூர்

No comments:
Post a Comment