About Me

My photo
Vellore, Tamil Nadu , India

Wednesday, July 3, 2024

நரம்பை இழுக்கும் சியாட்டிக்கா பிரச்னை... ஏன், எதற்கு, எப்படி? #மயூரா ஆயுர்வேதாஸ்ரம்

பேராசன (சியாட்டிக் ) நரம்பு வழி பரவும் வலி...  தீர்வு என்ன?

தசை பிடிப்பு, தண்டுவட வட்டுகள் விலகியிருப்பது, நரம்புகள் மீதான அழுத்தம் என பல காரணங்களினால் இடுப்பில் வலியை உணர்கிறோம். இந்த வரிசையில் சியாட்டிகாவும் ஒன்று. இயற்கை யோகா மருத்துவ முறைகளின் வாயிலாக இந்த சியாட்டிகாவினால் ஏற்படும் வலிக்கு நிவாரணம் பெறுவது குறித்து இங்கே பார்க்கப்போகிறோம்.

சியாட்டிக் நரம்பு 

சியாட்டிக் என்பது உடலின் மிகப்பெரும் நரம்புகளில் ஒன்று. இது தண்டுவடத்தில் தொடங்கி, இடுப்பு, தொடை மார்க்கமாக கால்களுக்கு செல்லக் கூடியது.

உடலின் முக்கிய வேலையாக, தண்டுவடத்துக்கும் கால் தசைகளின் இயக்கத்துக்கும் இடையே செயல்பாட்டை தீர்மானிப்பதில் சியாட்டிக் நரம்பு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நரம்பின் வழியாக பயணப்படும் வலியை சியாட்டிகா என்கிறோம்.

சியாட்டிகா வலி

நரம்பில் நாட்பட்ட அழுத்தம் கிடைப்பதால் வலி தோன்றுகிறது. இந்த வலி இடுப்பில் தொடங்கி கால் மற்றும் பாதத்தில் எரிச்சலாகவும், குடைச்சலாகவும் உணரப்படுகிறது. வெகு நேரம் அமர்ந்திருந்து எழும்போதும், குனிந்து நிமிரும்போதும், எடைகளை தூக்கும்போதும் இவை அதிகமாக தென்படும். சியாட்டிகா பாதிப்பு கண்டவர்கள் கால்கள் மரத்துப்போவது, மதமதப்பாக உணர்வது, குத்தலான வலி, இடுப்பிலிருந்து காலுக்கான பலவீனத்தை உணர்வது ஆகியவற்றை அதிகம் எதிர்கொள்வார்கள்.

வலி போக்கும் பாரம்பரிய தமிழ் மருத்துவம்

இந்த பாதிப்பிலிருந்து விடுபட அதிகளவில் வலி நிவாரணிகளை எடுப்பது வழக்கமாக இருக்கிறது. பக்கவிளைவுகள் உடைய வலி நிவாரணிகளை தவிர்த்துவிட்டு இயற்கை முறையில் நிவாரணம் பெறுவதே சிறந்தது

பாதிக்கப்பட்டவர்களுக்கு தண்டுவட  சிகிச்சையில் தண்டுவடத்தில் சொடக்கு விழுவதுபோல சிறிய சத்தத்தையும் உணரலாம். இதன் மூலம் தண்டுவடத்தில் நீடித்த அழுத்தம், தண்டுவட வட்டுக்கள் மற்றும் வட்டுகளுக்கு இடையேயான சவ்வு பிசகியிருப்பது போன்றவை குணமாகும். இந்த கை நுட்ப சிகிச்சை மூலம் நாளடைவில் குணம் பெறலாம்.

இதன் மூலம் வலி நிவாரணிகளை உட்கொள்ளாது, அறுவை சிகிச்சைக்கு அவசியமின்றி, நீண்ட காலமாக அவதிப்பட்டிருந்த சியாட்டிகா பாதிப்பிலிருந்து விடுபடலாம்.

நமது உடலின் ஆற்றல் சக்தி சீரான ஓட்டத்துக்கும் உதவிகரமாகும். இந்த ஆற்றல் ஓட்டத்துக்கு உடலில் எங்கெல்லாம் அடைப்பு ஏற்படுகிறதோ அங்கெல்லாம் நாளடைவில் வலி மற்றும் வீக்கத்தை உணரலாம். ஆயுர்வேத மருத்துவத்தின் உதவியுடன் இந்த அடைப்பை நீக்கி ஆற்றல் ஓட்டத்தை இயல்பாக்குவதன் மூலமாக, வலியிலிருந்தும் வீக்கத்திலிருந்து விடபட முடியும்

உணவே மருந்து

சியாட்டிகா வலி கண்டவர்கள் அன்றாடம் மஞ்சள் தண்ணீர் உட்கொண்டு வரலாம். ஒரு குவளை நீரில் கால் டீஸ்பூன் மஞ்சள் கலந்து கொதிக்க வைத்து அருந்தலாம். இதனை தினத்துக்கு 3 வேளை உட்கொள்ளும்போது, மஞ்சளின் வேதிப்பொருட்கள் சியாட்டிகா நரம்பு உபயத்தால் ஏற்படும் வலி மற்றும் வீக்கத்தை குறைக்க உதவுகின்றன. கூடுதலாக சிறிதளவு வெந்தயத்தை இரவு தண்ணீரில் ஊறவைத்து, காலையில் அந்த வெந்தயத்தையும், நீரையும் விழுங்குவது நிவாரணம் தரும்.

தசைகளை இலகுவாக்குவதிலும், தூக்கத்தை தருவிப்பதிலும் ஜாதிக்காயின் உட்பொருட்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஜாதிக்காயை பொடி செய்து தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து உட்கொள்ளலாம். ஜாதிக்காயின் நற்பயன்களை அரோமா எண்ணெயாகவும் பெறலாம். இதன் சில துளிகளை தேங்காய் எண்ணெயில் கலந்து வலி கண்ட இடங்களில் தடவி வரலாம்.

எச்சரிக்கை

அன்றாட நடவடிக்கைகளில் ஒரு சில எச்சரிக்கை குறிப்புகளை பின்பற்றுவதன் வாயிலாகவும் சியாட்டிக் பாதிப்பு தீவிரம் பெறாது தவிர்க்க இயலும். குறிப்பாக முன்பக்கம் குனிவது, முறையற்ற வகைகளில் எடை தூக்குவது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். எடை தூக்கியே ஆகவேண்டும் என்ற சூழல் எழுந்தால், இரு கரங்களிலும் சமமான எடையை பராமரிப்பது அந்த எடையும் 5 கிலோவுக்கு மிகாமல் இருப்பது உள்ளிட்ட எச்சரிக்கைக் குறிப்புகளை பின்பற்றுவதும் அவசியம்.

ஆசனங்கள், பிராணாயாமம்

மேலும் இங்கே தரப்படும் 2 ஆசனங்கள் மற்றும் 1 பிராணாயாமம் ஆகியவற்றை பழகுவதும், தொடர்ச்சியாக பின்பற்றுவதும் சியாட்டிக் தொந்தரவுகளில் இருந்து விடுபட உதவும்.

நாகம் தலையைத் தூக்கும் வடிவத்தை ஒத்த புஜங்காசனம் பயில்வது உடலுக்கு தளர்வு அளிப்பதுடன், தண்டுவடத்துக்கும் நல்ல பயிற்சியாகும். பாலத்தின் தோற்றத்தினை ஒத்த சேதுபந்தாசனம் பயில்வதும் உதவும். இந்த இரு யோக நிலைகளிலும் தினம்தோறும் நாலைந்து எண்ணிக்கைகளிலும், ஒவ்வொரு முறையில் தலா பத்து விநாடிகளுக்கு சுவாசம் பெறும் வகையிலும் பயில்வது நல்லது. உரிய பயிற்சியாளர் அல்லது இயற்கை யோகா மருத்துவரிடம் பயிற்சி பெற்று, தினந்தோறும் பழகுவது உடலுக்கு நீடித்த பலன்களை அளிக்கும்.

கூடுதலாக, நாடி சுத்திக்கு உதவும் பிராணாயாமம் பயில்வதும் சிறப்பான இயற்கை வலி நிவாரணியாக உதவும்.

மருத்துவ ஆலோசனை மற்றும் சந்தேகங்களுக்கு அழைக்கவும்...

பேரன்புடன்….
சுதாகர் G வைத்யா
மயுரா ஆயுர்வேதாஸ்ரம்
நாடி பரிசோதனை மற்றும் மருத்துவ ஜோதிட ஆராய்ச்சியாளர்.

பாரம்பரிய மருத்துவத்தில் எங்களின் குறிகோள் உடல் நலம் மற்றும் சுகாதாரத்தை காப்பதே… இங்கு ஆயுர்வேதம், சித்தா, மற்றும் பிற மருத்துவ ஜோதிட  அறிவியலின் ஊடாக நாங்கள் தனிப்பட்ட ஆலோசனைகள், மற்றும் நோய் தீர்க்கும் சிகிச்சைகள், சுகாதாரம் மற்றும் அழகு தொடர்பான சேவைகளை வழங்குகிறோம்.

மேலும் மூலிகைகள் மற்றும் சித்தா, ஆயுர்வேத மருத்துவம் பற்றிய உங்களது சந்தேகங்களுக்கும், ஆலோசனைக்கும் தொடர்பு கொள்ளவும்…
Mayura Vedic Pharmacy
(Siddha & Ayurvedha)
#40, Old Busstand Commercial Complex,
Near Thiruvalluvar Statue,
Anna Salai. Vellore – 632 004
Call :90430 25336

Mayura Vaidya Salai
(Holistic Healing Solutions)
Near Vani Vidyalaya School 
V.G.Nagar, Katpadi – 632 006
Call : 90421 35336


#அக்கறை #உடலும் #உயிரும் #மனம் #மயூரா #ஆயுர்வேதம் #சித்தா #நாடிபரிசோதனை #மருத்துவஜோதிடம் #வேலூர்


No comments:

Post a Comment

“மூட்டு அகற்றுவது தீர்வு அல்ல; அதன் இயற்கை இயக்கத்தை மீட்டெடுப்பதே மருத்துவம்.”

மூட்டு வலிக்கு அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வா? உண்மை என்ன சொல்கிறது? ✨ மூட்டு வலி இன்று பலருக்கும் வாழ்க்கைத் தரத்தை குறைக்கும் ஒ...